districts

img

கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வேண்டும்

திருவள்ளூர், ஆக 17-

      ரயில் பாதையால் பாதிக்கப்படும் விவசாயிகள் நிலம் பாதுகாப்பு மாநாடு வியாழனன்று (ஆக-17) திருத்தணியில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் நடை பெற்றது.

     திண்டிவனம் முதல் நகிரி வரை ரயில் பாதை அமைக்கும் திட்டத்தால், திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம் பத்மாபுரம் தொடங்கி பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர்பேட்டை வழியாக சின்னமுடிப்பள்ளி வரை சுமார் 2ஆயிரம் ஏக்கர் முப்போகம் விளையக்கூடிய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கின்றனர். விவ சாயிகளின் நலன்காக்கும் வகையில் நிலம் பாதுகாப்பு மாநாட்டை விவ சாயிகள் சங்கம் நடத்தியது.

    இதற்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சி.பெருமாள் தலைமை தாங்கினார். வட்ட துணைத் தலைவர் டி.எஸ்.ஏழுமலை வரவேற்றார். விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஜி.சம்பத் துவங்கி வைத்து பேசினார்.  

     தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜெயச்சந்திரன், மாவட்ட செயலாளர் ஸ்ரீநாத் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன் மாநாட்டை நிறைவு செய்து பேசி னார்.வட்ட துணைச் செயலாளர் நந்தகுமார் நன்றி கூறினார்.

 புதிய நிர்வாகிகள்

      ரயில் பாதை அமைக்கும் திட்டத்தால் பாதிக்கும் விவசாயிகள் நிலம் பாதுகாப்பு போராட்ட ஒருங்கி ணைப்பு குழுவின் அமைப்பாள ராக சி.பெருமாள், துணை அமைப்பாளர்களாக டி.எஸ்.ஏழுமலை, வெங்கடேசன் உள்ளிட்ட  11 பேர் கொண்ட போராட்ட ஒருங்கி ணைப்பு குழு தேர்வு செய்யப்பட்டது.  

தீர்மானங்கள்

      திண்டிவனம் முதல் நகரி வரை ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவ சாயிகளுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும், சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க செப் 8 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு வட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும், ரயில் பாதையை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும், முப்போகம் விளையக்கூடிய நிலங்க ளில் எடுப்பதை கைவிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.