பழவேற்காடு,ஜூலை 26-
பழவேற்காடு ஊராட்சி ஜே.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்காக தனியார் அறக்கட்டளை உதவியுடன் கழிப்பறை கட்டித்தரப்பட் டுள்ளது.
சமூகபொறுப்பு திட்டத்தின் கீழ் தனியார் அறக்கட்டளை காட்டுப்பள்ளி துறைமுகத்துடன் இணைந்து இந்த 6 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பள்ளியில் 380 மாணவர்களில் 220 மாணவி களுக்கு போதுமான கழிப்பறை வசதி இல்லை.
இதனால் மாணவிகள் இயற்கை உபாதைகளை வெளியேற்ற பெரிதும் அவதிப்பட்டனர். குறிப்பாக 15 முதல் 17 வயது டையவர்களுக்கு சுத்தமான கழிப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் தொற்று நோய் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருந்த்து. இந்நிலையில் தனியார் அறக் கட்டளை உதவி யுடன் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை சட்டமன்ற உறுப்பி னர் துரை சந்திரசேகர் திறந்துவைத்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.