திருப்பத்தூர். மே 20-
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருப்பத்தூர் கூடுதல் தலைமை பொறியாளர் அலு வலகம் முன்பு திட்டக் கிளைத் தலைவர் எஸ்.தண்டபாணி தலைமை யில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
மின்வாரியத்தில் பணி புரியும் கேங்மேன் தொழிலா ளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்தும், ஆட்குறைப்பு செய் வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜோதி, ஓய்வு பெற்றோர் சங்க மாநில இணை ச் செயலாளர் ஏங்கல்ஸ், திட்டக்கிளை செயலாளர் கே.சந்திர சேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.சிவசீலன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் திட்டக்கிளைப் பொருளாளர் ஆர்.வெங்க டேசன் நன்றி கூறினார்.