districts

சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக கூடுதல் கிருஷ்ணா தண்ணீரை கோரும் அரசு

ஊத்துக்கோட்டை,ஆக.17-

      சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணாநதி நீர் பங்கீடு திட்டப்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும்.  ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    கடந்த ஜன வரி மாதத்தில் பூண்டி ஏரியில் போது மான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெற வில்லை. கோடை வெயில் காரண மாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர். இதனை ஏற்று கடந்த மே 1-ந் தேதி கண்டலேறு அணை யில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதிக பட்சமாக வினாடிக்கு 530 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. மே 3-ந் தேதி முதல் ஆக 17 வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,584 டி எம்.சி. தண்ணீர் வந்துள்ளது.

     பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 டி. எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். வியாழனன்று நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 30.09 அடியாக பதிவாகியது. 1,760 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.  ஏரிக்கு கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் வினாடிக்கு 220 கன அடியாக வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரியின் நீர் இருப்பு தற்போது 54 விழுக்காடு  மட்டும் நிரம்பி உள்ளது. மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம் பாக்கம் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 70 விழுக்காடாக உள்ளது. எனவே குடிநீர் ஏரிகளில் மேலும் தண்ணீரை சேமித்து வைக்க தமிழக நீர்வளத்துறை அதி காரிகள் முடிவு செய்துள்ள னர். தற்போதைய நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் மொத்தம் 6,866 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. (மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 757 மி.கன அடி ஆகும். சென்னையின் குடிநீர் தேவைக்காக தினமும் 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை வருகிற நவம்பர், டிசம்பர் மாதம் தீவிரம் அடையும். பருவமழை தொடங்குவதற்கு முன்பு வரை குடிநீரை தட்டுப்பாடு இன்றி விநியோகம் செய்யும் வகையில் கிருஷ்ணா தண்ணீரை கூடுதலாக பெற தமிழ்நாடு அரசு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

     இதைத்தொடர்ந்து கண்ட லேறு அணையில் இருந்து கூடுத லாக கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று ஆந்திரா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.