திருவண்ணாமலை, மே 27-
ஒப்பந்தத் தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் நடைபெற்ற பிரச்சார பயணக்குழுவினருக்கு திரு வண்ணாமலை மாவட்டம் முழுவதும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அண்ணாசிலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கே.காங்கேயன் தலைமை தாங்கினார். இ.பாரி வர வேற்றார். பயண குழுவின் தலை வர் எஸ்.கண்ணன் பேசுகையில், திருவண்ணா மலையில் மாதந்தோறும் ஏராளமான மக்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
ஆனாலும், ஏழை, எளிய மக்கள், முறை சாரா கூலித் தொழிலாளர்க ளின் வறுமை நிலை மாற வில்லை. தற்போது நிலவும் கடுமையான வெயிலில் சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமான பணியாளர்கள் குறைந்தபட்ச கூலிக்காக உழைக்கின்றனர். உழைக் கும் மக்களின் வாழ்வாதா ரத்தை காக்க, நாங்கள் திரு வண்ணாமலை மட்டு மல்ல, தமிழகத்தின் 7 மையங்களிலிருந்து 2,100 கி.மீ. தூரம் நடை பயண மாக பிரச்சாரம் செய்து வருகிறோம்.
தில்லியில் விவசாயி களின் போராட்டம் காரண மாக, புதிய வேளாண் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது. தமிழ்நாட்டில் வேலை நேரத்தை அதிகரித்த போது, சிஐடியு போராட் டத்தின் காரணமாக, அந்த சட்டம் திரும்ப பெறப் பட்டது. உழைப்பாளி மக்க ளின் கோரிக்கை ஏற்கப் படும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்றார்.
மாநிலச் செயலாளர் விஜயன் பேசுகையில், ஒன்றிய அரசில் 9 லட்சம் காலி பணியிடங்களும், மாநில அரசில் 4 லட்சம் காலி பணியிடங்களும் உள்ளன. தனியார் நிறு வனங்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தும் தமிழ்நாடு அரசு, ஏன் அரசு துறைகளில் வேலை வாய்ப்பு முகாம் களை நடத்த மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி னார். அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங் களை நிரப்புவதன் மூலம், இட ஒதுக் கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.
பல்வேறு அமைப்புகள் வரவேற்பு
போளூர், கலசப்பாக்கம், நல்லவன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபயண குழுவினருக்கு ஆட்டோ ஓட்டுநர்கள், அரசு ஊழியர், மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள், வாலிபர் சங்கத்தினர், மின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது.
இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், வட்டார செயலாளர்கள் ரமேஷ்பாபு, அப்துல்காதர், பி.சுந்தர், ரவிதாசன், எம்.பிரகலநாதன், எஸ்.ராம தாஸ், அண்ணாமலை, விவ சாயிகள் சங்க தலைவர் பல ராமன், வாலிபர் சங்க செய லாளர் சி.எம்.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.