சென்னை, ஜூலை 26-
தீவிர வயிற்றுப் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைபர்தெர்மிக் இன்ட்ரா பெரிடோனியல் கீமோ தெரபி மையம் சென்னை கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மருத்துவ மனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர், புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர் ராஜாசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
50 சதவீதத்துக்கும் அதிகமான கருப்பை புற்றுநோய், 30 முதல் 50 சதவீத வயிற்று புற்றுநோய் மற்றும் 20 சதவீத பெருங்குடல் புற்றுநோய் வயிற்று குழியின் பெரிட்டோனியல் என்னும் வயிற்று அறையின் மேற்பரப்பில் பரவு கிறது. இந்த வகை புற்று நோயால் தீவிர மாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது அவர்க ளின் உயிர்வாழும் விகிதத்தை 1 முதல் 2 ஆண்டுகள் அதிகரிக்க உதவுகிறது. சைட்டோரேடக்டிவ் அறுவை சிகிச்சை மற்றும் ஹைபர்தெர்மிக் இன்ட்ரா பெரிடோனியல் கீமோதெரபி போன்ற தீவிரமான அறுவை சிகிச்சை போன்ற வற்றின் காரணமாக, இந்த நோயாளிகளில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் 5 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ்கின்றனர் என்று இந்நிகழ்ச்சியில் பேசிய ராதா கிருஷ்ணன் கூறினார்.