districts

img

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மலர் சாகுபடி பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்திய - இஸ்ரேல் வேளாண்மை திட்டத்தின் கீழ் தளியில் செயல்பட்டு வரும் கொய்மலர் மகத்துவ மையத்தில் ஓசூர் மற்றும் தளி சுற்றியுள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 50 மாணவ, மாணவிகளுக்கு மலர் சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மலர்கள் சாகுபடி, உர மேலாண்மை, அலங்கார செடிகள் வளர்ப்பு மற்றும் உற்பத்தி குறித்து தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி பயிற்சியளித்தார்.