கொசஸ்தலை-ஆரணி ஆற்றில் வெள்ளம்: தரைப்பாலங்கள் மூழ்கின
பெரியபாளையம்,செப்.28- திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து முழுகொள்ளவை நெருங்கி யது. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரியில் இருந்து முதலில் 1000 கனஅடி உபரி நீர் திறக்கப் பட்டது. எனினும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கத் தொடங்கி யது. மொத்த கொள்ளளவான 35 அடியில் 34.25 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படு கிறது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 3210 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிக அளவிலான உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ் தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது.கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மெய்யூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. எனவே,மெய்யூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சீத்தஞ்சேரி வழியாக செல்கின்றன. மேலும் தரைப்பாலம் அருகே புதியதாக கட்டி வரும் மேம்பாலம் தற்காலிக போக்குவரத்துக்கு பயன்படுத்திக் கொள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வருகிறது. இதேபோல் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளை யம் அருகே அஞ்சாத்தம்மன் கோயில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது. சுமார் ஒரு அடிக்கும் மேல் இந்த தரைப்பாலத்தின் மீது தண்ணீர் பாய்ந்து செல்கிறது.ஆபத்தை உணராமல் அதில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதேபோல் ஆரணி-மங்கலம் இடையே ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக நடைபாதை நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோடம்பாக்கம்- போரூர் இடையே சாலை பழுதுபார்ப்பு பணி
சென்னை,செப்.28- பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற் காடு சாலையில் வடபழனி, சாலிகிராமம், வளசரவாக் கம், ஆழ்வார் திருநகர், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவ னத்தின் ஒப்பந்ததாரரான லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் மூலம் சாலை பழுதுபார்க்கும் பணி கள் துரிதமாக நடந்து வருகிறது. எனவே, இரவு நேரங்க ளில் மழை பெய்யாத ஒரு வாரகாலத்தில் சாலை பழுது பார்க்கும் பணிகள் அனைத்தும் முழுமை யாக முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இப்பணிகள் இரவு நேரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெங்கு கொசு: ரூ. 60 ஆயிரம் அபராதம்
அம்பத்தூர், செப். 28- திருவேற்காடு நகராட்சிப் பகுதியில் டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருந்தவர்களிடம் இருந்து அபராதம் ரூ. 60 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருப்பவர்களை கண்ட றிந்து, அபராதம் வசூலிக்க ஆணையர் ஜஹாங்கீர் பாஷா சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலை மையில் துப்புரவு ஆய்வா ளர்கள், மேற்பார்வை யாளர்கள்,105 டெங்கு ஒழிப்பு பரப்புரையாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணி யில் தீவிரமாக ஈடுபட்டு வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு கள் போன்ற இடங்களில் தேவையற்ற பொருட்களில், தேங்கியுள்ள நன்னீரில் டெங்கு கொசு முட்டைகள், புழுக்கள் உள்ளனவா என்று சோதனை செய்தனர். சோதனையில் பலவீடு களில் டெங்கு கொசு புழு முட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ. 60 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
மின்சாரம் கசிந்து மாடுகள் பலி
திருவள்ளூர், செப்.28- பூண்டி, புஷ்பகிரி கோயில் தெருவைச் சேர்ந்த வடிவேல் 10 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். வியாழனன்று பூண்டி பகுதியில் பலத்த மழை பெய்தபோது அவரது மாடு கள் வயல்வெளி பகுதியில் உள்ள மின்மாற்றி அருகே சென்றன. அந்த நேரத்தில் மின்மாற்றியில் மின்கசிவு ஏற்பட்டதால் 3 பசுமாடுகள் மின்சாரம் பாய்ந்து இறந் தன.
தப்பி ஓடிய வாலிபர் விபத்தில் சிக்கி பலி
காஞ்சிபுரம்,செப்.28- காஞ்சிபுரம், அடுத்த குண்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது26). வியாழனன்று மாலை இவரை சட்டவிரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக சீனிவா சனை மோட்டார் சைக்கிளில் அமர வைத்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது பேருந்து மோதி சீனிவாசன் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் இறந்தார்.
கைதி தற்கொலை முயற்சி
சென்னை, செப். 28- புழல் சிறையில் தண்டனை கைதி ஒருவர் தூக்க மாத்திரை, கண்ணாடி துண்டுகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றுள் ளார். புழல் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு இருப்பவர் பாம்பு நாகராஜ் (38). கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அவர் சிறையில் உள்ளார். சிறைக்கு சென்ற பிறகும் அவர் கஞ்சா பயன் படுத்தியதாக கூறப்படுகி றது. இதையடுத்து அவருக்கு சிறையில் கிடைக்க வேண்டிய சலுகைகள் மூன்று மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டது. மேலும் உயர் பாதுகாப்பு பிரிவில் அவர் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் அவர் தூக்க மாத்திரைகளையும், கண்ணாடி துண்டுகளையும் தின்றதாகக் கூறப்படுகிறது. சிறைக்காவலர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத் துவமனையில் சிகிச்சைக் காக அனுமதித்தனர்.
3 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உயர்வு
சென்னை,செப்.28- சென்னையில் ஸ்டான்லி, ராஜீவ்காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், கே.கே.நகர் அரசு மருத்து வமனைகளில் டெங்கு பாதித்து சிகிச்சை பெறுவோர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி தமிழக பொதுசுகாதாரத்துறை தீவிர மாக கண்காணித்து தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணி களை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஜனவரி முதல் இந்த மாதம் வரை 4454 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. ஜனவரி மாதம் 866 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலையில் படிப்படியாக குறைந்தது. மீண்டும் ஆகஸ்டில் பாதிப்பு 535 ஆக அதிகரித்தது. இந்த மாதத்தில் இதுவரையில் 610 பேருக்கு டெங்கு பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது. டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் 4 அல்லது 5 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு தீவிர மாக கண்காணித்து வருகின்றனர். இணை இயக்குநர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த துணை இயக்குநர்கள் மற்றும் துறை சார்ந்த பணியாளர்களுடன் இணைந்து கொசு ஒழிப்பு பணிகளையும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை கண்டறிந்து அவற்றை அகற்றவும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் அறிவுறுத்தி உள்ளார்.
பேருந்து வசதி இல்லாத பேரிகை கிராமம்
கிருஷ்ணகிரி,செப்.28- கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சூளகிரி-பேரிகைக்கும் தொப்புள் கொடி போன்ற நெருங்கிய உறவு உண்டு. இரண்டு ஊராட்சிகளிலும் சுமார் 25,000 மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது சிறு, சிறு தொழிற்சாலைகள் துவங்கப்படுகிறது. சூளகிரியில் புதிதாக உருவான சிப்காட்டில் பேரிகையை சேர்ந்த தொழி லாளர்கள் 300 க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருகின்றனர். சூளகிரி - பேரிகைக்கு இடையில் மலையும் வனமும் உள்ளதால் விலங்குகள் சுற்றித் திரிந்து வருகிறது. ஆபத்து நிறைந்த பகுதியாக இருப்பதால் சூளகிரியில் இருந்து 16 கிலோ மீட்டர் இருக்கும் பேரிகைக்கு ஓசூர், பாகலூர் வழியாக 46 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் நேரம் மட்டுமின்றி பணமும் விரயமாகிறது. எனவே, மாலை நேரத்தில் பேரிகை-சூளகிரி இடையே அரசு நகரப் பேருந்து இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால், மக்கள் போராட்டம் வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
செஞ்சி அரசு பள்ளிக்கு கூடுதலாக 12 வகுப்பறைகள்
விழுப்புரம், செப்.28- செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2 கோடியே 56 லட்சத்தில் புதிதாக 12 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார். செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.