சென்னை ஒரு கடலோர நகரம். எந்த ஒரு நகரமும் கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டருக்கு கீழே இருக்க கூடாது. நமது சென்னை நகரமோ கடல் மட்டத்தி லிருந்து 6 மீட்டர் உயரமே உள்ளது. கடல் மட்டம் மேலும் மேலும் உயரும் போது நகர மட்டம் குறைந்து மிக மோச மான பாதிப்பை சென்னை மக்கள் எதிர்கொள்ள நேரிடும். அதே போன்று வடசென்னையின் ஆறுகள், நீர்நிலைகள், நீர்வழிகள், வடிகால் அமைப்புகள் குறித்தும் ஒரு ஆக்கபூர்வமான திட்டம் தேவைப்படுகிறது. வடசென்னைக் கென்று சிறப்பு திட்டத்தை உருவாக்கும் போது அரசு இவற்றையெல்லாம் கவ னத்தில் கொள்ள வேண்டும்.
"தெற்காசியாவிலேயே மிகச்சிறந்த வெள்ள வடிகால் அமைப்பை பெற்றி ருப்பது சென்னை பெருநகரம்" என்று சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தின் பேராசிரியரும், நீரியல் ஆர்வலருமான டாக்டர் எஸ்.ஜனகராஜன் குறிப்பிடுகிறார். அப்படியென்றால் மழை பெய்யும் போது மழை நீர் கடலுக்குள் ஓடாமல் நகருக்குள் நுழைந்து வெள்ள பாதிப்பை உருவாக்குவது ஏன்? இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தாலே வட சென்னை வெள்ளத்தில் மிதப்பது ஏன்?
"தற்போதுள்ள பெரும்பாலான நீர் வழிகளில் (கூவம், பக்கிங்காம் கால்வாய், கேப்டன் கெனால், ஓட்டேரி நல்லா கால்வாய் போன்ற) வண்டல் படிந்துள்ளன. வடிநீர் கால்வாய்களிலும், கரையோரங்களிலும், ஏரி மற்றும் அதன் கரையோரங்களிலும் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. இதனால்தான் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றன" என்று சிஎம்டிஏ சொல்கிறது.
சிஎம்டிஏ சொல்வது உண்மையா? சிஎம்டிஏ சொல்லும்
இந்த குடி யிருப்புகளை யாரும் திடீரென்று ஒரே நாளில் போய் அமைத்து விட முடியுமா? கரை வேட்டி கட்டிய செல்வாக்கு மிக்க ஒருவர் இந்த இடங்களை ஆக்கிரமித்து விலைக்கு விற்க, குடியிருக்க ஒரு வீடு வேண்டுமே என்கிற ஏக்கத்தில் இருந்து தமது முழு சேமிப்பையும் கரைத்து, பணம் கொடுத்து மக்கள் வாங்கி வீடு கட்டி னார்கள். இந்த குடியிருப்புகள் கட்டப் பட்டது அரசு நிர்வாகத்திற்கு தெரிந்தே, அதன் உதவியுடன்தானே நடை பெற்றது. எனவே மக்களை ஆக்கிர மிப்பாளராக சித்தரிக்க முயல்வது செய்த குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான அரச தந்திரமாகும்.
சரி வெள்ளப்பெருக்கிற்கு உண்மையான காரணம்தான் என்ன?
சமதளப் பகுதியான சென்னை நகரில் கழிவுநீர் செல்லும் குழாய்கள், மழை நீர் கால்வாய்கள் என இரண்டு வடிகால் அமைப்புகள் உள்ளன.
இந்த இரண்டு வடிகால்களில் இருந்து செல்கின்ற நீரை ஓட்டேரி நல்லா, கேப்டன் கெனால் போன்ற வரத்து கால்வாய்கள் ஆறுகளுக்கு கொண்டு சேர்க்கின்றன. ஆறு போன்ற பக்கிங்காம் கால்வாய் இதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த நீர் வழிகளில் தங்கு தடையின்றி மழை நீர் சென்று கடலில் கலந்தால் தான் சென்னையின் வெள்ளப்பெருக்கை தடுக்க முடியும். ஆக வரத்து கால்வாய்களில் வண்டல் படிந்துள்ளதால்தான் நீரோட்டம் தடை படுகிறது என்று சிஎம்டிஏ வே ஒத்துக்கொள்கிறது. ஆக இந்த வரத்து கால்வாய்களில் நீர் தடையின்றி ஓடு வதற்கான தொடர் பராமரிப்பு பணியை திறம்பட செய்ய வேண்டியது அரசின் பொறுப்பல்லவா?
பறக்கும் ரயில் திட்ட ஆக்கிரமிப்பு
நகரின் வெள்ள நீரை வெளியேற்று வதில் முக்கிய பங்கு வைப்பது பக்கிங்காம் கால்வாய். "தேவையான சுத்தி கரிப்பை செய்து ஒரு மனிதனை சிறு நீரகம் எப்படி பாதுகாக்கிறதோ, அத்தகைய மனித சிறுநீரகம் போன்றது பக்கிங்காம் கால்வாய்" என்கிறார் பேராசிரியர் டாக்டர் எஸ்.ஜனக ராஜ். சென்னையின் குறுக்கே பாயும் கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு ஆகிய மூன்றையும் இணைக்கிறது இந்த பக்கிங்காம் கால்வாய். சென்னை உயிர்ப்புடன் இருப்பதற்கு இக்கால்வாய் மிக முக்கிய மானது. 100 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்ட இந்த கால்வாயின் தற்போதைய நிலை, 30 மீட்டர் அகலமாக சுருங்கி விட்டது. பாரிமுனை பீச் துவங்கி வேளச்சேரி வரை உள்ள பறக்கும் ரயிலின் கட்டுமான அடித்தளம் பக்கிங்காம் கால்வாயின் கரையில்தான் கட்டப்பட்டுள்ளது. இதனால் ஓடும் நீரின் அளவு மிக மோசமாக தடை படுகிறது என்று அனைத்து நீரியல் வல்லு நர்களும் கூறுகின்றனர்.
மக்களின் குடியிருப்புகளை ஆக்கிர மிப்பு என்று பேசக்கூடிய பண்டிதர்களும், நீதிபதிகளும் பறக்கும் ரயில் திட்ட ஆக்கிரமிப்பு பற்றி பேச மறுப்பது ஏன்?
வடசென்னையின் உயிர் நதி கொசஸ்தலையாற்றின் நிலை என்ன?
2015 வெள்ளப்பெருக்கின் போது வட சென்னை மிதந்ததற்கு யார் காரணம்? பூண்டி ஏரியில் இருந்தும், புழல் ஏரியி லிருந்தும் திறந்து விடப்பட்ட உபரி நீரும், வடசென்னையின் வரத்து கால்வாய்களில் இருந்து வெளியேறிய மழை நீரும் பக்கிங்காம் கால்வாயில் இணைந்து எண்ணூர் முகத்துவாரம் வழி யாக மிகச் சுலபமாக கடலில் கலந்தி ருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்க வில்லை. இந்த மொத்த நீரையும் உள்வாங்க முடியாமல் மணல் திட்டு களால் அடைபட்டு கிடக்கும் எண்ணூர் முகத்துவாரம் திணறியது. கடலில் கலக்க வேண்டிய வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததற்கான காரணங்க ளில் இதுவும் ஒன்று. முகத்துவாரத்தை பாது காப்பதும் பராமரிப்பதும் அரசின் கடமையல்லவா?
உபரி நீரால் கொசஸ்தலை ஆறு நிரம்பும்போது ஆற்றையொட்டியுள்ள பரவல் நிலங்களில் தண்ணீர் பாயும். இந்த ஆற்றின் பரவல் நிலங்கள் மட்டுமே 8000 ஏக்கர் ஆகும். வடசென்னை ஊர்க ளுக்குள் வெள்ளம் புகாமல் தடுப்பது இந்த பரவல் நிலங்களே. இந்த பரவல் என்கிற ஈர்நில பகுதியில் எந்த வித கட்டுமான பணிகளும் நடைபெறக் கூடாது. 1996 - கடற் பகுதி ஒழுங்காற்று ஆணையத்தின் அறிவிப்பும் கட்டுமான பணிகள் நடைபெறக் கூடாது என்பதை உறுதி செய்திருக்கிறது. கட்டு மானம் நடைபெறுவதுவதென்பது மக்க ளின் உயிரோடு விளையாட கூடிய தாகும். ஆனால் இவைகள் எதையும் பொருட்படுத்தாமல் 1090 ஏக்கர் பரவல் நிலத்தை ஆக்கிரமித்து துறைமுகம் கட்டி யுள்ளது ஒன்றிய அரசு. துறைமுகத்தை யொட்டி கார்கள் ஏற்றுமதி வளாகம் அமைக்க கூடுதலாக ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையமும், வல்லூர், எண்ணூர் அனல் மண் நிலை யங்களும் தாங்கள் எரிக்கும் கரியின் சாம்பல் கழிவுகளை கொட்டிட மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளன. ஒருபுறம் எண்ணூர் முகத்துவாரம் அடைபட்டு கிடப்பதாலும், மறுபுறம் பரவல் நிலங்களை ஒன்றிய அரசும், மாநில அரசும் போட்டி போட்டு ஆக்கிர மித்ததாலும் ஆற்றில் கலந்த உபரி நீர் பின்னோக்கி திரும்பி மணலி, சடை யங்குப்பம் பர்மா நகர், திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட வட சென்னையின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வெள்ளத்தால் சூழப்பட்டது. இந்த உண்மைகள் அரசுக்கு தெரியாதா?
ஒரு நதியையே சாக்கடையாக மாற்ற முடியுமா?
கங்கை, பாவங்களை சுமக்கிற நதி என்று ஆன்மீக நம்பிக்கையாளர்கள் சொல்வார்கள். நம்முடைய கூவம் ஆறும் சென்னையின் மொத்த அழுக்கு களையும் சுமந்து செல்கிறது. ஒரு நதியையே சாக்கடையாக மாற்றிய பெருமை அரசு நிர்வாகத்தையே சாரும். 49 வகை மீன்கள் கூவத்தில் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இன்று கொசுக்கள் மானாவாரியாக பிறப்பெடுக்கும் நதியாக கூவம் உரு மாறிவிட்டது.
2014 - 15 ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் 604 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கூவம் நதி சீரமைப்பு திட்டம் அறிவிக்கப் பட்டது. ஆனால் ஏதும் நடக்கவில்லை. கூவத்தை விட மிக மிக மோசமாக இருந்த லண்டன் தேம்ஸ் நதி இப்போது அந்நாட்டின் வாழ்வியல் நதியாக காட்சிய ளிக்கிறது. குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கூவம் நதியை தூய்மை நதியாக மாற்றிட தமிழ்நாடு அரசு திட்டமிட்டால் வடசென்னையின் வாழ்வியல் நதியாக கூவம் மிளிரும்.
நீர் நிலைகளையும் நீர் வழிகளையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை யாகும். ஆற்றை பாதுகாத்து பரவலாக தடை செய்வதும், கூவம் நதியை தூய்மைப் படுத்துவதும், வரத்து கால்வாய்களை தூர்வாரி தொடர்ந்து பராமரிப்பதும், மூன்று ஆறுகளையும் இணைக்கின்ற பக்கிங்காம் கால்வாயில் தங்குதடையின்றி நீர் ஓடுவதை உத்தரவாதம் செய்வதுமே வட சென்னை மக்களை வெள்ள அபா யத்திலிருந்து பாதுகாக்கும்.
அலட்சியம் காட்டக்கூடாது
வடசென்னை வரலாற்றில் வெள்ள மும், வளர்ச்சியும் மாறி மாறி வந்து மக்களை வதைப்பதற்கு, மிக மோச மாக கையாளப்பட்ட நகர வளர்ச்சி திட்டம் என்பதை ஒத்துக் கொண்டு, ஆக்க பூர்வமான முறையில் வடசென்னைக் கென வளர்ச்சி கொள்கையையும், சிறப்பு திட்டத்தையும் அரசு உருவாக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கி யுள்ள இந்த மகத்தான இயக்கத்தில் வட சென்னை வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் பங்கு பெற வேண்டும் என அழைக்கிறோம்.
டி.கே.சண்முகம்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
சிபிஎம், வடசென்னை