districts

img

ஆரணியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை

திருவள்ளூர், டிச.1- ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பிச்சாட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆரணி யாறு நீர்த்தேக்கத்தில் தற்பொழுது நீரின் மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் நீர்தேக்கத்தின் முழு மட்ட நீர் அளவு ஞாயிறன்று (டிச.1) உயர்ந்துள்ளது.   தற்போது ஃபெஞ்சல் எனும் புயல் புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே கரையை கடந்துள்ளது. இந்த நிலையில்,  பிச்சாட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தும் சற்று அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  ஆந்திர மாநில அரசு,  டிச 1 காலை 10 மணியளவில் உத்தேசமாக 500 கன அடி உபரி நீரை திறந்து விட்டதால் ஆரணியாறு ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ளவர்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ள உபரி நீரை ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகள் மற்றும் தடுப்பணைகள் மூலம் தேக்கப்பட்டு ஏரிகளுக்கு நீர் வரத்து கால்வாய் மூலம் அனுப்பப்படுகிறது. நீர் தேக்கத்திற்கு மழை நீரினால் வரத்து அதிகமாகும் பட்சத்தில் மிகை நீர் வெளியேற்றத்தின் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது ஆரணியாற்றின் குறுக்கே உள்ள ஏ.என்.குப்பம் அணைக்கட்டு. லட்சுமிபுரம் அணைக்கட்டு, ரெட்டிபாளையம் தடுப்பணைகள் மூலம் சராசரியாக 3200 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.  எனவே ஆரணி ஆற்றின் கரையோர கிராமங்களான ஊத்துக்கோட்டை, தாராட்சி, பேரண்டூர், 43 பனப்பாக்கம், பால வாக்கம், காக்கவாக்கம், செங்காத்தா குளம், பெரியபாளையம், பாலவாக்கம், ஆர்.என்.கண்டிகை, அனந்தேரி, பேரிட்டி வாக்கம், வடதில்லை, மாம்பாக்கம், கல்பட்டு, மாளந்தூர், தொளவேடு, மேல்மாளிகைப்பட்டு, கீழ்மாளிகைப்பட்டு, பெரியபாளையம், ராளப்பாடி, மங்களம், காரணி. ஆரணி, போந்தவாக்கம், புது வாயல், துறைநல்லூர், வைரவன்குப்பம், மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு, பெருவாயல், ஏலியம்பேடு, பெரியகாவனம், சின்னகாவனம், பொன்னேரி, லட்சுமிபுரம், கம்மவார்பாளையம், பெரும்பேடு, வஞ்சிவாக்கம், வெள்ளோடை ஆலாடு, கொளத்தூர், குமாரசிறுலப்பாக்கம், மனோபுரம், அத்தமணஞ்சேரி, வேலூர், அ.ரெட்டிபாளையம், காட்டூர், தத்தமஞ்சி, கடப்பாக்கம், சிறுபழவேற்காடு, போலாச்சியம்மன்குளம், ஆண்டார்மடம், தாங்கல்பெரும்புலம் மற்றும் ஆரணி ஆற்றின் இருபுறம் உள்ள தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி  மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.