districts

img

திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரண விநியோகம் துவங்கியது

திருவள்ளூர், டிச.17- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி தாலுகா, மாதர் பாக்கம் நியாய விலை கடைக்கு உட்பட்ட 1071 நபர்க ளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி  ரூ.6 ஆயி ரம் நிவாரண உதவித் தொகையை வழங்கி னார்.  திருவள்ளூர் மாவட்டத்தில் 6 தாலுகா முழுவதும் வெள்ளத்தில்  பாதிக்கப்பட்ட 6,08,726 பயனாளிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார். மாவட்ட வரு வாய் அலுவலர். ராஜ்குமார். நாடாளு மன்ற உறுப்பினர் கே.ஜெயகுமார் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமா மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் முருகன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சண்முக வள்ளி மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) சண்முகம், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பரிதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.