districts

img

கடும் புகை மூட்டம்: சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

சென்னை,ஜன.14- புகைமூட்டம் பனி மூட்டம் காரணமாக சென்னை விமான நிலை யத்தில் 50 விமான சேவை கள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளா னார்கள். போகி பண்டிகையின் புகைமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலை யத்தில், சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. போகி பண்டிகை என்பது பழைய பொருட்கள் வீட்டின் முன்னால் போட்டு எரிப்பது வழக்கம். அதைப்போல் சென்னை விமான நிலையத்தை சுற்றி யுள்ள கவுல் பஜார், பம்மல், அனகாபுத்தூர், மீனம் பாக்கம், தரைப்பாக்கம், மணப்பாக்கம் உள் ளிட்ட பகுதிகளில் ஞாயிறன்று அதிகாலையில் இருந்து, குடியிருப்பு பகுதி மக்கள் உற்சாகமாக போகிப் பண்டிகையை கொண்டாடி னர். அவர்கள் தங்கள் வீடு களில் உள்ள பழைய கழிவுப் பொருட்கள் பிளாஸ்டிக் டயர்கள் போன்றவைகளை தெருக்க ளில் எரித்ததால், ஏற்பட்ட புகை மூட்டங்கள், விமான நிலைய ஓடுபாதை மைதானங்களை   இருந்த தால் அதோடு பனிமூட்ட மும் இருந்ததால் சூழ்ந்து கொண்டதால், விமான நிலைய ஓடு பாதியே தெரியாத நிலை ஏற்பட்டது. இதை அடுத்து அதி காலை 4 35 மணிக்கு சிங்கப் பூரிலிருந்து 164 பயணி களுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதிகாலை ஐந்து நாற்பத்தைந்து மணிக்கு, 260 பயணிக ளுடன் லண்டனிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், ஆகிய இரண்டு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் மும்பை டெல்லி மஸ்கட் உள்ளிட்ட பல்வேறு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்ட மடித்துக் கொண்டு இருக்கின்றன. அந்த விமானங்களும் பெங்களூர் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதைப்போல் சென்னையில் இருந்து அந்த மான் புனே மும்பை டெல்லி தூத்துக்குடி ஹைதராபாத் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் பனி மூட்டம் காரணமாக புறப்பட முடியாமல் தாமத மாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலை யத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.