தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40ஆம் ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநில மைய அலுவலகத்தில்கொடியேற்று விழா மற்றும் கருத்தரங்கம் சனிக்கிழமை (மே 6) நடைபெற்றது. வடசென்னை மாவட்டத் தலைவர் வே.விஜயகுமரன் தலைமையில் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை , சென்னை மாவட்ட நிர்வாகிகள் சி.கலைச்செல்வி,ம.அந்தோணிசாமி, த.முத்துகுமாரசாமி வேல், த.ஏழுமலை ஆகியோர் பேசினர்.