districts

img

கடலூரில் காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு தொடங்கியது

கடலூர்,பிப்.6- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 3,359 பணியிடங்களை நிரப்பும் வகையில் 2-ம் நிலை காவலர் நேரடி தேர்வு (2-ம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு துறை வீரர்) கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 9,160 பேர் எழுதினர். இதற்கிடையே 2-ம் நிலை காவலர்க ளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு பிப்.6 முதல் 10 வரை கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  முதற்கட்டமாக 926 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்ததும், உயரம் சரிபார்க்கப்பட்டு, மார்பளவு அளக்கப்பட்டது. இவை அனைத்தும் தனித்தனியாக கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது.  இதில் தேர்வு பெற்றவர்கள் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டனர்.  உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வியாழக்கிழமை கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த உடல் தகுதி தேர்வை  ரயில்வே டிஐஜி ராமர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம், சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் பார்வை யிட்டனர். இந்த தேர்வு வரும் 10 ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது.