சென்னை, ஜூன் 30- சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சென்னை யில் நடைபெறவுள்ளது. இதற்காக நுங்கம்பாக் கத்தில் உள்ள எஸ்டிஏடி ஸ்டேடியம் நவீன வசதிக ளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் (டபிள்யூடிஏ) தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் உள்ள வீராங்கனைகள் இந்தபோட்டியில் கலந்து கொள்வார்கள் என்று தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தின் தலைவர் விஜய் அமிர்த ராஜ் தெரிவித்தார். காணொளி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவின் முதல் இரண்டு ஒற்றையர் வீராங்க னைகளான அங்கிதா ரெய்னா (169) மற்றும் கர்மன் தண்டி (494) ஆகியோர் பிரதான போட்டிக்கான வைல்டு கார்டுகளைப் பெறுவார்கள் என்றார். இந்தியாவில் டென்னிஸ் விளையாட்டை மேலும் பிர பலப்படுத்தவும் அதிகள வில் சிறுவர், சிறுமியர் இந்த விளையாட்டை விளையாட ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே இப்போட்டியின் நோக்கம் என்றும் அவர் கூறி னார். இந்தபோட்டியில் சானியா மிர்சா பங்கேற்பார் என்றும் இந்தாண்டு டென் னிஸ் போட்டியில் இருந்து ஓய்வுபெறவுள்ள அவருக்கு சிறப்பான வழியனுப்பி விழா நடத்தப்படும் என்றும் அமிர்தராஜ் தெரிவித்தார். இந்தியாவில் முதல் முறைய நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் நுங்கம் பாக்கம் விளையாட்டு அரங்கில் நவீன வசதி கள் குறிப்பிட்ட காலத் திற்குள் செய்து தரப்படும் என்றும் மாநில இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை முதன்மை செயலர் அபூர்வா கூறினார். செஸ் ஒலிம்யாட் போன்று இந்த போட்டியை யும் தமிழக அரசு சர்வதேச தரத்திற்கு சிறப்பாக நடத்தி முடிக்கும் என்றும் போட்டியை நடத்தும் தமிழ் நாடு டென்னிஸ் சங்கத்திற்கு அரசு அனைத்து உதவிகளை யும் செய்யும் என்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் கூறினார். அனைவருக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இந்த போட்டியை மாற்றுவதற்கு தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (டிஎன்டிஏ) எந்தஒரு வாய்ப்பையும் விட்டுவிடாது என்று கவுரவச் செயலாளர் பிரேம்குமார் கர்ரா குறிப் பிட்டார்.