திருவள்ளூர்,ஜன 13- உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வற்புறுத்தப்பட்டதால் கால் அழுகிய நிலையில் ஆதரவற்று கிடந்த தூய்மைக் காவலர் லலிதாவை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் கல்பாக்கம் ஊராட்சியில் லலிதா என்பவர் 7 ஆண்டுகளாக குப்பைகளை சேகரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணி களில் ஈடுபட்டு வருகிறார். கடந்த மாதம் 30ஆம் தேதி கையுறை மற்றும் காலணி போன்ற பாது காப்பு கவசங்கள் இல்லாமல் ஊராட்சி நிர்வாகத்தால் பிளீச்சிங் பவுடர் தெளிக் கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். இதனால் பிளிச்சிங் பவுடர் பட்டு லலிதாவின் இடது கால் முழுவதுமாக வெந்ததால் நடக்க முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து சென்னை அரசு ஸ்டான்லி மற்றும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச் சைக்காக சென்ற போது லலிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இடது கால் முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளதால் உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த கொடுமையை பார்த்து அதிர்ச் சியடைந்த அவரது கணவர் ஜனவரி 3ஆம் தேதி அன்று மரணமடைந்தார். இந்த செய்தி ஜனவரி 11 ஆம் தேதி அன்று தீக்கதிரில் வெளியிடப்பட்டது. இதையறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தூய்மை பணிபுரிவோர் நல வாரிய குழு உறுப்பினர் ஹரிஷை லலிதா இல்லத்திற்கு அனுப்பி வைத் தார். சனிக்கிழமையன்று (ஜன 13), கல்பாக்கம் கிராமத்தில் படுக்கையில் உள்ள லலிதாவின் வீட்டிற்கு வந்த அதிகாரி அவரிடம் விசாரணை நடத்தி னர். எழுந்து நிற்ககூட முடியாமல் உள்ள லலிதாவை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாநில அரசின் சார்பில் லலிதாவிற்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கதிர்வேலு, மாவட்ட செய லாளர் ஏ.ஜி சந்தானம், மாவட்டத் துணைத் தலைவர் குமரவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீஞ்சூர் பகுதி செயலாளர் ஜெயவேல், பகுதி குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.