ஆம்பூர், பிப். 18- ஆம்பூரில் வாகன ஓட்டிகளுக்கே தெரியாமல் அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆம்பூரின் முக்கிய சாலை சந்திப்புகளில் ஆம்பூர் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகனங்களின் எண்களை குறித்துக்கொண்டு அவர்கள் அபராதம் விதிக்கின்றனர். தண்டனை விதிப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.சிறிது நேரம் கழித்து வாகன உரிமையாளரின் தொலைபேசி எண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. சிக்னல் இல்லாத இடத்தில் போக்குவரத்து சிக்னலை வாகன ஓட்டிகள் மீறியதாகவும், தலைக்கவசம் அணியாமல் சென்றதாகவும் கூறி அபராதம் விதித்து குறுச் செய்திகள் அனுப்பப்படுகிறது. இதனால் சாதாரண கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எமவே வாகன ஓட்டிகளுக்கே தெரியாமல் அவர்களுக்கு அபராதம் விதிக்க்கும் காவலர்களின் அலட்சியப் போக்கை தடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.