கடலூர்,ஆக.23-
காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி நுகர்பொருள் வாணிபக் கழக சங்கத்தினர் (சிஐடியு) கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகங்களில் உள்ள காலிப் பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 2013 முதல் 2016ம் ஆண்டு வரை பணி புரிந்த பருவகால பணியாளர்களை உடனே நிரந்தரம் செய்ய வேண்டும்.கொள்முதல் நிலையங்களில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். பொது விநியோகதிட்டத்தை பலப்படுத்தி, ரேசன் கடைகளுக்கு தரமான பொருட்களை, சரியான எடையில் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவர் முரளி தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் ஆர்.புவனேஸ்வரன், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.பழனிவேல், செயலாளர் சுதர்சன் பாபு, பொருளாளர் கலைவாணன், துணை செயலாளர்கள் செந்தில்குமார், ஸ்டாலின், வாசுதேவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.