அதி கன மழையால் வணிகர்கள் பாதிப்பு: நிவாரணம் வழங்க பேரமைப்பு கோரிக்கை
சென்னை, டிச.19 - தமிழகத்தில் பெய்த அதி கன மழையால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுன் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் அதி கன மழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக் குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மழைவெள்ளம் பொது மக்களுக்கும், வணிகர்களுக் கும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி யிருப்பது வருத்தத்திற்குரிய நிகழ்வாகும். எதிர்பாராத இந்த கனமழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடை யுள்ளம் கொண்ட வணிக பெருமக்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் ஆதரவுக்கரங்களை நீட்டி, நிவாரணப் பணிகளுக்கான அத்தி யாவசிய பயன்பாட்டுப் பொருட்களை வழங்குவதற்கு முன்வரவேண்டும். அந்தந்த பகுதிகளில் உள்ள பேரமைப்பு நிர்வாகிகள் தங்களின் பகுதி சார்ந்த வணிக பெருமக்களோடு இணைந்து அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உடனிருந்து நிவா ரணப் பணிகளை மேற்கொள்வதற்கு தங்க ளின் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மேலும், மிகப்பெரும் இக்கட்டான காலகட்டத்தில் பயன்பாட்டுப் பொருட் கள் தட்டுப்பாடின்றி பொதுமக்களை சென்ற டையும் வகையில் பொது சேவையாற்றிட வணிகர்கள் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 2 மாதத்தில் தொடங்கும் என அறிவிப்பு
காஞ்சிபுரம்,டிச.19- சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 746.18 ஏக்கர்நிலப் பரப்பில் அமைய உள்ளது. இதில் 1917.17 ஏக்கர் நிலம் மட்டுமே அரசுடையது. மற்றவை அனைத்தும் விவசாய மற்றும் பட்டா நிலங்கள் ஆகும். இவை அனைத்தும் கையகப்படுத்த வேண்டி இருக்கிறது. புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள்முதலே பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் விவசாய நிலங்களை கையகப்படுத் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த மாதம் விமான நிலைய பணிக்கு நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்தநிலையில் நிலங்களை கையகப் படுத்த தனியாக மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப் பட்டுள்ளார். அவர் நிலங்களை கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிப்பது, கிராமமக்களுடன் பேச்சுவார்த்தை, இழப்பீடு தொகை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளார். விமான பணிக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணி இன்னும்ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த பணி முடிவடைய குறைந்தது ஒரு ஆண்டு ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
புதிய வகை கொரோனா தொற்று பரவலை தடுக்க வேண்டும் புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் கோரிக்கை
புதுச்சேரி, டிச. 19- புதிய வகை கொரோனா தொற்று பரவலை தடுத்திட உரிய நடவடிக்கையை புதுச்சேரி அரசு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- புதிய வகை கொரோனா ஜே .என் 1 நோய் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பரவத் தொடங்கி யுள்ளது. இது குறித்து ஒன்றிய சுகா தார துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறி வுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் புதிய வகை ஜே என்1 என்ற கொரோனா நோய் தொற்று இருப்பதாக தகவல் வருகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் 9 பேர் இத்தகைய தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. குளிர்கால பருவ சூழலில் இருமல், சளி, இன்புளுயன்சா காய்ச்சல், டெங்கு என பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டம் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாநில சுகாதாரத்துறை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல் மற்றும் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை குறித்து ஆக்கப்பூர்வமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. நோய் பரவலை தடுக்க தேவையான பொது சுகாதார நடவடிக்கை, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை. மாநில அரசு மற்றும் சுகாதாரத் துறை யின் மெத்தனமான செயல்பாடு கவலை யளிக்கிறது. கிறிஸ்மஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை மற்றும் விழாக்காலமான இத்தருணத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும். மாநிலத்தின் வருவாய் மட்டுமே அரசின் பிரதான நோக்கமாக இருக்க முடியாது. மக்களின் உயிர் பாதுகாப்பு, சுகா தார பாதுகாப்பு முக்கியமானது ஆகும். வருமுன் காப்பது பெரும் செலவினத்தை யும், உயிரிழப்பையும் தவிர்க்க முடியும். ஆகவே மாநில அரசு புதிய கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில முதல்வர் தலைமையில் உயர்மட்ட கூட்டத்தை நடத்த வேண்டும், ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு தலை பின்பற்றவும், அனைத்து மருத்துவ மனைகளின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். தேவையான மருத்துவர்களை நிய மனம் செய்யவும்,காலியாக உள்ள செவி லியர், உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களில் ‘கோவிட் 19’ பெருந் தொற்று காலத்தில் களப்பணி ஆற்றிய ஒப்பந்த ஊழியர்களை,தேசிய சுகாதார இயக்க ஊழியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
காலமானார்
கடலூர்,டிச.19- மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜூ, சிதம்பரம் கேசினோ பேக்கரி உரிமை யாளர் சேகர், வழக்கறிஞர்கள் செந்தில், செல்வி ஆகி யோரது தந்தை சிவக்கொழுந்து விருத்தாசலத்தில் கால மானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி. ஆர்.ரவிச்சந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.கே.சரவணன், கட்சியின் மூத்த வழக்கறிஞர் ஏ.சந்திர சேகர், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்.
விபத்தில் மாணவர்கள் பலி
கிருஷ்ணகிரி, டிச.19- கிருஷ்ணகிரிமாவட்டம், பர்கூர்அருகேஉள்ளஜெகதேவி பகுதியைச்சேர்ந்தகிரி, அஜய், ராகவன்ஆகியமூன்றுபேரும்கந்திக்குப்பத்தில்உள்ளஒருதனியார்பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், நண்பர்கள் மூன்று பேரும் ஒரு இரு சக்கர வாகனத்தில் பர்கூர் ஜெகதேவி சாலை, நேரு நகர் அருகே சென்றபோது கண்டெய்னர் லாரி மீது அவர்களது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராகவன், அஜய் இருவரும் சம்பவ இடத்தி லேயே பலியானார்கள். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கிரி, அரசு மருத்துவ மனை செல்லுல் வழியில் உயிரிழந்தார். கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிஓடிய நிலையில் தகவலறிந்து சென்ற பர்கூர் காவல்துறையினர் மாண வர்களின் உடல்களை மீட்டு, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி, டிச.19- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகள் நடை பெறுவதால் மாற்றுத்திறனாளிக ளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்கள் இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரன் குமார் தெரி வித்துள்ளார். தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க, மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகள் அனைத்து வட்டாரங்க ளிலும் நடைபெற்று வரு கிறது. ஒவ்வொரு கிராமங்க ளிலும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று தரவு களை திறன்பேசி மூலம் பதிவு செய்யப்படுகிறது. இந்த பணிகள் மகளிர் திட்டம் களப்பணியாளர்கள் மூலம் நடை பெற்று வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை விவரம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு, கல்வி, பணி நிலவரம் மற்றும் அரசு உதவிகள் கோருவது குறித்து விவரங்கள் பிரத்யேக செயலி மூலம் பதிவு செய்து வருகின்றனர். இதனால், வியாழக்கிழமை தோறும் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம்கள் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறாது. பிப்ரவரி மாதம் 2024 முதல் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.