சென்னை, மார்ச் 2 - சொந்த மகனுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அடையாறு இந்திராநகரைச் சேர்ந்தவர் விஸ்வ பாண்டியன் என்பவருக்கும், அண்ணாநகர் அன்புகாலனி யைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு இந்த சிறுவன் 4 வயது குழந்தையாக இருந்த போது தந்தை விஸ்வபாண்டியன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார், விஸ்வபாண்டியன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சமி, விஸ்வபாண்டியன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை யும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.