காஞ்சிபுரம், பிப். 16 – முதலாளிகளுக்கு கடனை தள்ளுபடி செய்ய முடியும் என்றால் ஏன் விவசாயிகளுக்கு ஏன் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பினார். பயிர் கடனை முழுமை யாக தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் குவிண் டாலுக்கு ரூ.3ஆயிரம் வழங்க வேண்டும், டெல்லி யில் நடைபெற்ற விவசாயி கள் போராட்டத்தில் ஒன்றிய மோடி அரசு ஒப்புக் கொண்ட கோரிக்கை நிறை வேற்ற வேண்டும். விவசாயி கள் அனுமதி இல்லாமல் நிலம் எடுக்கக் கூடாது. 100 நாள் வேலை திட்டத் திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ரயில்வே, வங்கி, பாதுகாப்பு, மின்சா ரம், போக்குவரத்து, எல்ஐசி, கூட்டுறவு வங்கி, பொதுத்துறை நிறுவ னங்களை தனியார் மயமாக்கக் கூடாது. உரம், விதை, பூச்சி மருந்து விலையை கட்டுப்படுத்த வேண்டும். உள்ளிட்டு 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் காஞ்சி புரம் மாவட்டக்குழு சார்பில் (பிப்.16) வெள்ளியன்று வேலியூரில் பொது வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பெ.சண்முகம், பேசுகையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்பது விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகளின் கோரிக் கைகள் மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் உள்ள மக்களின் முக்கியமான கோரிக்கை என்றார்.
100 நாள் வேலை கிராமப் புற மக்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு திட்டமா கும். ஆனால் ஒன்றிய அரசு இதுவரை யாருக்கும் 100 நாட்கள் வேலை கொடுத்த தில்லை. 40 நாட்கள் அல்லது 45 நாட்கள் மட்டுமே வேலை கொடுத்துள்ளது. இந்நிலையில் மோடி அரசாங்கம் வருடா வருடம் இந்த திட்டத்திற்கான நிதியை குறைத்துக் கொண்டே வருகிறது. 100 நாள் வேலை செய்யக்கூடிய 11 கோடி பேரும் தங்களது பெயரை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் சம்பளம் இல்லை என்று கூறி 11 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை பறித்து மோடி அரசு வீட்டிற்கு அனுப்பி விட்டது. ஆதார் அட்டையும், 100 நாள் வேலை ஆட்டை யும் அரசின் கம்ப்யூட்ட ரில் இருக்கும் போது அதை இணைக்கா மல் 100 நாள் வேலையில் இருந்து ஏராளமானோரை வெளியேற்றிவிட்டார்கள். இந்நாட்டில் ரூபாய் 14 லட்சம் கோடி கடனை முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்கிறார்கள் ஆனால் ஏன் விவசாயி களுக்கு கடனை தள்ளுபடி செய்வதில்லை என அவர் கேள்வி எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.சாரங்கன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.நேரு, சிபிஎம் திரு பெரும்புதூர் வட்டச் செயலா ளர் பா.வடிவேல், விவசாய சங்க நிர்வாகிகள் எஸ் ஆனந்த், என்.நந்தகோபால், என்.சுகுமார், ஜி.ஆனந்தன், ரங்கநாதன் கே.செல்வம், எல். முருகேசன் உள்ளிட் டோர் பேசினர்.