புதுச்சேரி, ஜன.27- தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரியில் விவசாயிகள் டிராக்டர் மற்றும் இருசக்கர மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ண யிக்க வேண்டும். தொழி லாளர்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். புதுவையில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத் திற்கு போதிய நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை கைவிட வேண் டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். ரயில்வே, பாதுகாப்பு, மின்சாரம் உட்பட பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்கு தாரை வார்க்கக் கூடாது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி கடலூர் சாலை தியாகிகள் சதுக்கத்தில் இருந்து துவங்கிய பேர ணிக்கு சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி, விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் சீனிவாசன், சேது செல்வம், ஞானசேகரன், தமிழ்ச்செல் வன்,சங்கர், கீதா நாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். மறைமலை அடிகள் சாலை, நெல்லித்தோப்பு, இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சிலை, காமராஜர் சாலை, அண்ணா சாலை வழியாக சென்று சுதேசி மில் அருகில் தொழி லாளர்கள், விவசாயிகள் பங்கேற்ற பேரணியுடன் நிறைவடைந்தது. இப்போ ராட்டத்தில் திரளானோர் தங்களது வாகனங்களுடன் பங்கேற்றனர். அதேபோல் கடலூர், விழுப்புரம், கள்ளக்கு றிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக ஐக்கிய விவசாயி கள் முன்னணி அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன ஊர்வ லம் நடைபெற்றது.