குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், வழக்குகளை திரும்ப பெறுதல், மின்சார மசோதாவை மறுபரிசீலனை செய்தல் உள்ளிட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத ஒன்றியஅரசை கண்டித்து ஞாயிறன்று (ஜூலை 31) தாம்பரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தென்சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.