வேலூர், அக்.11- வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்கிட தமிழக அரசை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கணியம்பாடி பேருந்து நிறுத்தம் அருகில் தாலுகா செயலாளர் டி.வசந்த குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போராட்டத்தை சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சி.எஸ்.மகாலிங்கம் துவக்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செ.ஏகலைவன் நிறைவு செய்து பேசினர். வி.ச துணைத் தலைவர் ஜி.நரசிம்மன், விதொச மாவட்டப் பொருளாளர் புண்ணியமூர்த்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். விச மாவட்ட, வட்ட நிர்வாகிகள் எம்.கணேஷ், எஸ்.ஏ.செந்தாமரை, ஆர்.மணிகண்டன், பி.நதியா பி.கண்ணன்கே.சீனிவாசன், ரமேஷ், எஸ்.வெங்கடேசன் ( வேட்டைக் காரன் சங்கம்) மற்றும் பலர் கலந்து கொண்ட னர். இதே கோரிக்கைகளுக்காக குடி யாத்தம், திருப்பத்தூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன விலங்குகளால் ஏற்படும் காயங்கள் பாதிப்புகளுக்கு முழுமையான மருத்துவ சிகிச்சையை அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் இலவசமாக செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளி டமிருந்து பயிர்களை பாதுகாக்க வனத் துறை மூலம் சோலார் மின்வேலி அமைத்து தர வேண்டும். அமிர்தி, நாகநதி ஆகியவை கூடுமிடத்தில் தெள்ளையில் அணை கட்ட நட வடிக்கை எடுத்திட வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது. திருப்பத்தூர் இதே கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் அருகில் தாலுகா செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் துளசி நாராயணன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன் நிறைவு செய்து பேசினார். விச மூத்த தலைவர் ஆர். ஏ. லட்சுமண ராஜா, தாலுகா தலைவர் அப்பாதுரை, பொருளாளர் வீரமணி, மலை வாழ் மக்கள் சங்க ஏலகிரி மலை பொறுப்பா ளர் மனோகரன், சகோதர சங்கத் தலை வர்கள் ரங்கன், கேசவன், செல்வம், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.