districts

img

மேகதாட்டில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தகோரி காரைக்காலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேகதாட்டில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தகோரி காரைக்காலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் காரைக்கால் மாவட்டத் தலைவர் முத்துகுமரசாமி தலைமை தாங்கினார்.  புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ.சங்கர், தலைவர் நிலவழகன், மற்றும் விவசாய சங்கம், தொழிலாளர் சங்கங்களின்  தலைவர்கள் வின்செண்ட், தமீம் அன்சாரி, பழனிவேல், மதிவாணன், ரஜேந்திரன், யாசின், கலியபெருமாள் சந்திரசேகரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.