ராணிப்பேட்டை, அக். 10 - வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம், மனித உயிர் சேதத்தை தடுத்து நிறுத்தக்கோரியும் , வன விலங்கு பட்டியலில் இருந்து காட்டுப் பன்றியை நீக்கி முழுமையான இழப்பீடு தொகை வழங்கக்கோரியும் விவ சாயிகள் செவ்வாயன்று (அக். 10) ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். கிட்டு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் இரா. சரவணன், கட்சியின் மாவட்டச் செயலாளர் என். காசிநாதன், சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், விதொச மாவட்ட தலைவர் டி. சந்திரன், வாலாஜா இடைக்கமிட்டி செயலாளர் ஆர். மணிகண்டன், தா. வெங்கடேசன், மலை சங்கம் சேகர், வேட்டைக்காரன் சங்கம் சேட்டு, வாலிபர் சங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி முழக்கங்களை எழுப்பினர். இறுதியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும். சேதமான பயிர்களுக்கு முழுமை யான நிவாரணம் ஒரு மாத காலத்திற்குள் இழப்பீடு தொகை கிடைப்பதை உறுதிபடுத்த வேண்டும். வன விலங்கு களால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் காயங்களுக்கு தொடர் மருத்துவ சிகிச்சையின் முழு செலவை வனத்துறை யும், தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும். கேரள மாநிலத்தில் உள்ளது போல காட்டு பன்றிகளை அழிப்பதற்கு உரிய ஆணையை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும். பயிர்களை பாது காக்க சோலார் சூரிய மின் வேலியை அரசே முழு மானியத்துடன் அமைத்துத் தர தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வனத்துறை, தமிழக அரசு விரைந்து நிறைவேற்றி தர வேண்டுமென கோரிக்கை வைத்து கோஷங் களை எழுப்பினர்.