districts

img

பம்பு செட்டுகளுக்கு பிரீபெய்டு மின் மீட்டர்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு

புதுச்சேரி, அக்.28- பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட கோரி திருக்கனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய பம்பு செட்க்கு பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும்  மின் துறையின் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மின்துறை தொடர்ந்து புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி திருக்கனூர் கே.ஆர்.பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மண்ணாடிபட்டு  கமிட்டி செயலாளர் ரகு. அன்புமணி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சீனுவாசன், கரும்பு விவசாயிகள் சங்க கௌரவத் தலைவர் வடிவேல், அகில இந்திய விவ சாயிகள் சங்க மாநில செயலாளர் சங்கர் சங்கர், கமிட்டி உறுப்பினர்கள் விநாயகம், தட்சிணாமூர்த்தி, கந்தநாதன், அமிர்தவல்லி, முத்து, நாகராஜ் உட்பட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.