வேலூர், அக்.10 - பீடித்தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வலி யுறுத்தி வேலூர் மாவட்ட பீடித்தொழிலாளர் சங்கம் சார்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தர்ணா போராட்டம் மாவட்ட தலைவர் சி.சரவணன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு பீடித்தொழிலாளர் சம்மேளன தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் துவக்கி வைத்தும், சிஐடியு மாவட்ட செயலாளர எஸ்.பரசுராமன் நிறைவு செய்தும் பேசினர். பீடிசங்க மாவட்ட பொதுச்செயலாளர் வி.நாகேந்திரன் மாவட்ட பொருளாளர் ஆர்.மணிமாறன், மாவட்ட துணைத்தலைவர் பி.காத்தவராயன் கோரிக்கை விளக்க வுரையாற்றினர். சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புகுழு மாவட்ட அமைப்பாளர் ஏ.குப்பு வாழ்த்தி பேசினர். இந்த போராட்டத்தில் பீடித் தொழிலை நம்பியுள்ள 1 கோடி தொழிலாளர்கள், விவ சாயிகள், பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாற்று வேலைக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச பென்சன் ரூ.3000மாக உயர்த்தி வழங்க வேண்டும். பீடித் தொழி லாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசாணை வெளியிட்டு ஒப்பந்த கூலி வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். வாரத்திற்கு 6 நாள் வேலை உத்திர வாதம் செய்திட வேண்டும். பதிவு செய்யப் படாத சட்டவிரோத பீடி உற்பத்தியை தடுத்து நிறுத்த வேண்டும். பீடி மீது விதிக்கப்பட்டுள்ள 28% ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நாடு முழுவதும் 1000 பீடி சுற்றுவதற்கு அடிப்படை கூலி ரூ.395 அறிவித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர்கள் பேசினர்.