ராணிப்பேட்டை, அக். 13- ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலு வலகத்தில் வெள்ளியன்று (அக். 13) நடை பெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை விவசாயிகள் அனை வரும் புறக்கணித்தனர். இந்த கூட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் எல்.சி. மணி கூறுகையில், “வன விலங்குகளால் பயிர் சேதம் மற்றும் உயிரிழப்பிற்கு உரிய நிவாரணம் உடனடி யாக வழங்க வேண்டும். அரசு பண்ணை தொழிலாளர்களுக்கு 4 மாதமாக வழங்க வேண்டி சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். மாவட்டத்தில் ஏரி, ஆறுகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். ஆற்காடு அடுத்த தாஜ்புரா, சத்யா நகர் தனியார் கிடங்கில் மருத்துவ கழிவு களை கொட்டி இருந்தால் துர்நாற்றம் வீசுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் பேசச் சென்றோம். ஆனால், துறை சார்ந்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் கூட்டத்தை புறக்கணித்தோம் என்றார்.