திருவள்ளூர், அக் 24- வரத்து கால்வாய், பரா மரிப்பு இன்றி உள்ளதால் ஏரிக்கு ஒரு துளி தண்ணீர் கூட வராததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள மேல்முதலம்பேடு ஏரி 175 ஏக்கர் பரப்பளவுள்ள கொண்டதாகும்.இந்த ஏரியை நம்பி 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிக்கு ஏ.என்.குப்பம் அணைக்கட்டு பகுதியி லிருந்து வரும் வரத்து கால் வாய் பராமரிப்பு இன்றி, சமவெளியாக உள்ளது. மரம், செடி, கொடிகள் வளர்ந்து காடு போல காட்சி யளிக்கிறது.இந்த கால்வாயின் இரு பக்கங்களி லும் கரைகள் இல்லை. இந்த நிலையில் பல இடங்களில் தேவையில்லா மல் சிறு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனுமில்லை.இது குறித்து கவரைப்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை பாசன பிரிவு உதவி பொறியாளர் அலுவலகத்தில் கேட்ட போது, எங்கள் அனுமதி யின்றி ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் தடுப்ப ணைகள் கட்டப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றனர். ஏரி சங்கத்தின் தலைவர் ஜோதி கூறும்போது, பொன் னேரியில் உள்ள உதவி செயற்பொறியாளரிடம் வரத்து கால்வாயை தூர் வார வேண்டும் என்று வலி யுறுத்தியதாக கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் எம்.சி.சீனு, விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி எஸ்.கோவிந்தராஜ், விவசாயி கே.மோகன், ஆகியோர் கூறுகையில் இந்த நிலை நீடித்தால் கால்வாய் காணாமல் போகும் அபாயம் உள்ளது என்றனர். வடகிழக்கு பருவமழை துவங்கயுள்ள நிலையில் வரவு கால்வாயில் உள்ள மரம், செடிகளை அகற்றி இரண்டு பக்கங்களிலும் கரையை உடனடியாக அமைக்க வேண்டும். இல்லையென்றால் பெரு வெள்ளமே வந்தாலும் மேல்முதலம்பேடு ஏரி நிரம் பாது.வறண்டு காணப்படும். நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்துள்ளது. ஆழ்துளை கிணறுகளில் உள்ள மோட்டார்கள் இயங்காமல் உள்ளதால் விவசாயம் பாதிப்பதோடு, குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும். நூறு நாள் வேலை திட்டத் திற்கு ஒதுக்கிய நிதியி லிருந்து தேவையில்லாமல் கட்டப்பட்டுள்ள சிறு தடுப் பணைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயி கள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வா கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். - பெ.ரூபன்