districts

img

விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

கிருஷ்ணகிரி, ஏப்.29- விவசாயிகள் அனுமதியின்றி விவசாய நிலங்கள் வழியே கெயில் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து இடையநல்லூர், எடப்பள்ளி சூதாலம் விவசாயிகள் ஓசூர் சாராட்சி யர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். ஓசூர் வட்டம், மத்திகிரி அருகே எடப்பள்ளி சூதாலம் இடையநல்லூர் பகுதிகளில் தனியார் விவசாய நிலங்களில் கெயில் குழாய் பதிக்கும் ஆரம்பகட்ட பணிகளை செய்து வருகின்றனர். தனியார் விவசாய நிலங்களின் மீது குழாய் பதிக்கப் போவதாக சில  வாரங்களுக்கு முன்பு கெயில் நிறுவனத் தின் கடிதம் விவசாயிகளுக்கு அனுப் பப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் குழாய் பதிக்க அனுமதிக்க  முடியாது என கெயில் நிறுவனத்திற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு கொடுத்திருந்தனர். இவற்றை எதையும் பொருட் படுத்தாமல் அளவீடு செய்தல், பார்வையிடுதல் பணிகளை துவக்கியதால் ஆத்திர மடைந்த விவசாயிகள் கெயில் பணியாளர்களிடம் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் நிலங்களில் குழாய் பதிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 50  ஏக்கர் நிலம்உடனடியாக பாதிக்கப் படும். 15 ஏக்கர் நேரடியாக பாதிக்கப் படுவதுடன் கெயில் நிர்வாகத்திற்கு உரிமையாக்கப்படும். ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை  உள்ள 50 க்கும் மேற்பட்ட விவசாயி களும் பாதிக்கப்படுவார்கள். குழாய் பதிக்கும் பகுதியில் குறுக்கே செல்வதற்கும், சாலைகளை பயன்படுத்துவதற்கும் அனுமதி மறுக்கப்படும்.விவசாயத்திற்கான தண்ணீர் குழாயை கூட மறுபகுதிக்கு எடுத்துச் செல்லஅனுமதி மறுக்கப் பட்டு, மறுபகுதியில் உள்ள தங்கள் சொந்த நிலத்திலும் விவசாயம் செய்ய  முடியாமல் முற்றிலும் பாதிக்கும் நிலை உள்ளது. தங்கள் குடும்பங்களுக்கு வாழ் வாதாரமாக உள்ள ஒரே சொத்தான பரம்பரை விவசாய நிலத்தையும் விவசாயத்தையும் அழிக்கும் வகையில் கெயில் திட்டத்தை அமல் படுத்தாமல் கேரள மாநிலத்தில் அமைக்கப்பட்டது போல் சாலை ஓரமாக குழாய் பதித்து திட்டத்தை அமல் படுத்திக் கொள்ளுங்கள் எனவும் வலியுறுத்தினர். மேலும் பாதிப்படைய இருக்கும் 636, 639 சர்வே எண்களுக்கு உரிமை யாளர்களான இடயநல்லூர் ராமக்கா, தொட்டையா, ரகுராம்,ராஜப்பா சூதா லம் கிராமத்தின் சர்வே எண்களுக்கு உரிமையாளரகளான பட்டேல் திம்மராயகவுடு, சாமன்னா, எல்லப்பா ஆகியோர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர்  எம்.எம்.ராஜு, ஒன்றிய தலைவர் திம்மா ரெட்டி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராஜாரெட்டி தலைமையில் ஓசூர் சாராட்சியரிடம் இது குறித்து திங்க ளன்று மனு அளிக்க வந்தனர்.  சாராட்சியரின் உதவியாளர் மனுக் களை பெற்றுக்கொண்டார். தேர்தல் காலங்களில் அரசு பணி கள் உள்ளிட்ட எதுவும் செய்யக் கூடாது  என்று ஆணையே உள்ள நிலையில் தற்போது கெயில் குழாய் பதிப்பிற்காக நிலத்தை பார்வையிடுவதும் அளவீடு செய்வதற்கான தயாரிப்புகள் செய்வதும் அரசின் சட்டங்களுக்கு எதிரானது.மேலும் எங்கள் நிலம் வழி யாக எங்கள் அனுமதியின்றி கெயில்  குழாய் பதிக்க ஒருபோதும் அனுமதிக்க  முடியாது,மீறி நிலங்களில் இப்பணி கள் துவங்கப்பட்டால் பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பாக  பெரும் திரள் போராட்டம் வெடிக்கும் எனவும் கூறினர்.