ஹரியானா - டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் மீது பாசிச பாஜக அரசு கொடூரமான தாக்குதல்களை நடத்தி இளம் விவசாயி தோழர் ஷூப் கரன்சிங்கை சுட்டுக்கொன்றதை கண்டித்து வேலூர் ஓட்டேரி பேருந்து நிலையம் அருகில் விவசாய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.எஸ்.மகாலிங்கம் தலைமை தாங்கினார். ஜி.நரசிம்மன் (விவசாயிகள் சங்கம்) சரவணன், சுந்தர் (புரட்சி கர தொழிலாளர் முன்னணி) புண்ணியமூர்த்தி (விவசாய தொழிலாளர்கள் சங்கர்) டி.முரளி (சிஐடியு) சங்கர் (வாலிபர் சங்கம்) ஆகியோர் பேசினர்.