புதுச்சேரி,ஆக.3-
புதுச்சேரி ஆட்டோ ஓட்டு நர்கள் மற்றும் உரிமை யாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி முதலி யார்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடை பெற்றது.
சங்கத்தின் புதுச்சேரி தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார். சிஐடியு தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன் கலந்து கொண்டு, மறைந்த மூன்று உறுப்பினர்களின் குடும்ப த்திற்கு பாதுகாப்பு நிதியாக ரூ.41 ஆயிரம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாநிலத் தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனுவாசன், சங்க நிர்வாகிகள் விஜய குமார்,துளசிங்கம், மது, பழனி பாலன், நூர்முகமது, ராமு, மனோகர், ரவிக் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.