திருவண்ணாமலை,அக். 11 திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரபல நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட பிளாஷ் பைப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. டாடா நிறுவனத்தின் பெயரில் பிளாஷ் பைப்புகள் திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் தொழிற்பேட்டையில் தயாரிக்கப்படுவதாக அறிவுசார் சொத்துரிமை பிரிவினருக்கு புகார் வந்தது.இதையடுத்து ஆய்வாளர் புஷ்பா தலைமையில் அறிவுசார் அமலாக்க பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தியபோது அந்த தொழிற்பேட்டையில் கார்த்திக் பைப் உற்பத்தி ஆலையில் இருந்து டாடா நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பிளாஷ் பைப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த ஆலையின் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது-