சென்னை, பிப்.7- சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப் படும் வீடு, மனை கண்காட்சியான “ஃபேர்ப்ரோ 2023” வரும் பிப்ரவரி 17 முதல் 19 வரை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாக இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின் கூட்ட மைப்பின் (கிரெடாய்) தமிழக தலைவர் சிவகுருநாதன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: வீடு வாங்குபவர்கள், ரியல் எஸ்டேட் துறை முதலீட்டாளர்கள், கட்டுமான நிறு வனங்கள் மற்றும் வங்கிகள் போன்ற வற்றிற்கு இந்த கண்காட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் இந்த அமைப்பில் உள்ள 60க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டு மான நிறுவனங்கள் தங்களின் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துகளை 20 லட்ச ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையில் காட்சிப்படுத்த உள்ளனர். மேலும் இங்கு வந்து சொத்துகளை வாங்குபவர்களுக்கு ஏராளமான சலுகைகளையும் இந்நிறு வனங்கள் வழங்க உள்ளன. இந்த கண்காட்சிக்கு முன்னதாக, பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 12 வரை, தி. நகர், விஜயா மஹாலில் வீட்டுக் கடன் மேளா நடத்தப்பட உள்ளது. அங்கு வீடு வாங்குபவர்கள் தங்கள் வீட்டுக் கடனுக்கான முன் அனுமதியை வங்கிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் பி.க்ருதிவாஸ் கூறுகையில், இந்த கண்காட்சி யானது வீடு கட்டுவோர்- வாங்குவோர் இடையிலான உறவை மேம்படுத்துவதிலும் சிறப்பான பங்கு வகிக்கும். இதனால் கட்டு மான நிறுவனங்களும், வாடிக்கையாளர் களும் மிகுந்த பலன் பெறுவார்கள் என்றார். இந்த ஆண்டு கண்காட்சியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட், எச்டிஎப்சி வங்கி, கனரா வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகள் பங்கேற்க உள்ளன.