districts

img

காலவரையற்ற போராட்டம்: மயங்கி விழுந்த பயிற்சி மருத்துவர்

சிதம்பரம், ஜன. 15- மாதாந்திர ஊக்கத்தொகை கேட்டு அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் பணி யாற்றும் இளநிலை பயிற்சி மருத்து வர்களுக்கு கடந்த 8 மாத மாக ஊக்கத்தொகை வழங்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளா கத்தில் சுமார் 75 பயிற்சி மருத்து வர்கள் சனிக்கிழமை (ஜன. 15) திடீர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.   இதுபற்றி பயிற்சி மருத்து வர்கள் கூறுகையில், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக இந்த கல்லூரி மாற்றப்பட்டு, 8 மாதங்களாக எங்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை வழங்கப்பட வில்லை. மற்ற அரசு மருத்துவக் கல்லூரி களில் ஒவ்வொரு பயிற்சி மருத்துவருக்கும் மாதாந்திர உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஆனால் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ஒரு ரூபாய் கூட ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. அரசு கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் போல நாங்களும் கொரோனா பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரு கிறோம். எங்களில் 45 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கக்கோரி அரசுக்கு பலமுறை தெரிவித்தும் இது வரை வழங்கப்படவில்லை. அத னால் தமிழக முதல்வர் உடனடி யாக தலையிட்டு பயிற்சி மருத்து வர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும். இதை நிறைவேற்றும் வரை காலவரையற்ற போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, பல்கலைக  கழக துணைவேந்தர் கதிரேசன், காவல்துறை டிஎஸ்பி ரமேஷ்ராஜ், மருத்துவக்கல்லூரி முதல்வர் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்தையில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர் சக்தி பிரியா மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். பேச்சுவார்தையில் பயிற்சி பெண் மருத்துவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.