districts

வீடு வாங்குவோர் எதிர்கொள்ளும் பிரச்சனையை தீர்க்கும் குறைதீர் பிரிவு

சென்னை, அக். 30  சென்னையில்  கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சென்னை கிரெடாய்  குறை தீர்க்கும் பிரிவு செயல்பட்டு வருகிகிறது.  சமீப காலமாக அதிகமான வாடிக்கை யாளர்கள் வீடு மற்றும் நிலம் சம்பந்தமான தங்கள் பிரச்சினைகளுக்கு சென்னை கிரெடாயின் குறை தீர்க்கும் பிரிவை அதிக அளவில் அணுகி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் அனைத்து குறை களையும் இந்த குறை தீர்க்கும் பிரிவு நிவர்த்தி செய்துள்ளது. இது குறித்து கிரெடாய் சென்னை மண்டல தலைவர் சிவகுருநாதன் கூறுகையில், வீடு வாங்குபவர்களின் குறைகளை விசாரிக்க கிரெடாயில் தனி குழு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவு கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், நுகர்வோர் மற்றும் கட்டுமான நிறு வனங்களின் பிரச்சினைகளுக்கு  தீர்வு கண்டு வருகிறது. கட்டுமான நிறு வனங்களுடன் பிரச்சனை இருந்தால்  இந்த அமைப்பை அணுகுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஆணையத்தில் நியாயம் கிடைக்கும் என நுகர்வோர் கருதினால், அவர்கள் அங்கு செல்வதை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமானத்தை முடித்து சொத்தை ஒப்படைக்காமல் காலதாமதம் செய்வது, ஒப்பந்தங்களை ரத்து செய்யும்போது பணத்தை திரும்ப வழங்க மறுப்பது, குடியிருப்பு பகுதியில் போதிய வசதிகளை செய்துதராதது உள்ளிட்டவை தொடர்பான புகார்களே அதிகளவில் வருவதாகவும் அவர் கூறினார்.