districts

img

வார்டு மறுவரையறையில் ஆட்சேபனைகள் ஆய்வு செய்யப்படும்: ஆணையத் தலைவர்

சென்னை, டிச. 23 - வார்டு உருவாக்கத்தில் உள்ள ஆட்சேபனைகள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மறுவரை யறை ஆணைய தலைவர் கூறினார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சிகள்,  நகராட்சிகள் வார்டு மறுவரையறை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் புதனன்று (டிச.23) தாம்பரத்தில் நடை பெற்றது.   இந்தக் கூட்டத்தில்  அரசியல் கட்சி,  குடியிருப்போர் நலச்சங்கங்கள், பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள் கருத்துக்களை தெரிவித்தனர். “வார்டு வரையறை செய்வதற்கு முன்பாக கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி இருக்க வேண்டும். நான்கு  மாவட்ட மக்களை ஒரே இடத்தில் அழைத்து கருத்து கேட்பது சரியல்ல. மாவட்ட வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்க  வேண்டும்” என்றும் கூட்டத்தில் பங்கேற்ற வர்கள் கருத்து தெரிவித்தனர். வார்டு வரை யறை செய்ததில் ஏற்பட்டுள்ள ஆட்சேபனை களையும் தெரிவித்து மனுக்களை அளித்தனர்.

மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் தொகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, தாம்பரம் மாநகராட்சி 68ஆவது வார்டில், தற்போதைய மாடம்பாக்கம் பேரூராட்சி யின் 13ஆவது வார்டில் உள்ள எஸ்தர் கார்டன்  பகுதியை சேர்ந்த 3 அடுக்கு மாடி குடியிருப்பு கள் மற்றும் அதனருகில் உள்ள குடியிருப்பு கள் விடுபட்டுள்ளன. அதை 68 வது வார்டில்  இணைக்க வேண்டும்” என்றார். இந்தக் கூட்டத்தின் முடிவில்  பேசிய  ஆணையத்தின் தலைவர் வெ.பழனிக்குமார், இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதி கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கருத்து  தெரிவித்தனர். 302 மனுக்கள் வரப்பட் டுள்ளன. அந்த மனுக்களின் மீது அதிகாரி கள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்தக் கூட்டத்தில் வார்டு மறுவரை யறை ஆணைய உறுப்பினர் செயலர் சுந்தர வள்ளி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர்கள் ராகுல்நாத் (செங்கல்பட்டு), ஆல்பி ஜான்  வர்கீஸ் (திருவள்ளூர்), பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை) ஆர்த்தி (காஞ்சிபுரம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.