மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்த இடமில்லை அன்றாட பயணிகள் அவதி
ஆலந்தூர்,மே 5- சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மாதாந்திர அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே காலை நேரத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த முடியும். ஆனால் வழக்கமான பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் வழங்கப் படுவதில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். தினமும் பயணம் செய்வோருக்கு மாதாந்திர அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் பதிவு செய்யுமாறும் கூறி உள்ளனர். ஒரு மோட்டார் சைக்கிளுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.75 வசூலிக்கின்றனர். மாதாந்திர பாஸ் இல்லாமல், வாகன நிறுத்துமிடத்திற்கு மாதம் ரூ.3,500 செலவு செய்ய வேண்டி உள்ளது என்று பயணிகள் தெரிவித்தனர்.
80 சவரன் நகை கொள்ளை: வழக்குரைஞர் உட்பட மூன்று பேர் கைது
சென்னை, மே 5- சென்னை போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் வழக்கறிஞர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். போரூர் உதயா நகர் பேஸ் 2 பகுதியில் வசிப்பவர் ஜெயசீலன் (55). இவர் மருந்தக கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றார். பின்னர் அவர்கள் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது 80 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஜெயசீலன் போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விராசணை நடத்தினர். விசாரணையில் வில்லிவாக்கத்தை சேர்ந்த சூர்யா (32), தாமஸ் (24), வழக்கறிஞர் வினோத் ஆகியோர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் 3 பேரையும் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளி வாலிபர் கல்லால் அடித்துக் கொலை
காஞ்சிபுரம்,மே 5- சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 30). மாற்றுத்திறனாளி. வியாழ னன்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலை யில் வெள்ளியன்று காஞ்சி புரம்,மேட்டு தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபம் எதிரில் குமார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடப்பதை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
கலாஷேத்ரா ஹரிபத்மனுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் கடும் எதிர்ப்பு
சென்னை, மே 5- கலாஷேத்ரா கல்லூரி பாலியல் வழக்கில், உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை ஜூன் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக முன்னாள் மாணவி ஒருவர், அடையார் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கல்லூரி யின் நடனத் துறை உதவிப் பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்ரல் 3ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், ஹரிபத்மன் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஹரிபத்மன் தரப்பில், தனது வளர்ச்சியைப் பிடிக்காத சக ஆசிரி யர்கள், மாணவிகளைத் தூண்டி விட்டு எனக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளனர். 2019ஆம் ஆண்டு சம்பவம் நடந்ததாகக்கூறி, 4 ஆண்டுகளுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக, 162 மாணவிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள், ஹரிபத்மன் மீது குற்றச்சாட்டுக்களை தெரி வித்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய வேண்டி யுள்ளது . எனவே மனுதாரருக்கு பிணை வழங்கக்கூடாது. வழங்கினால் விசா ரணை பாதிக்கப்படும். தமிழ்நாடு மகளிர் ஆணையம் தரப்பில், 103 மாணவிகளிடம் விசாரித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவை மாற்றியமைக்க கோரி 7 மாணவிகள் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம், ஜூன் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது என்று விளக்கமளித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஹரிபத்மனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்ற ஹரிபத்மன் தரப்பு கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.
கேமரா மூலம் கண்காணிப்பு
சென்னை,மே 5- சென்னையில் குற்ற செயல்களை தடுக்க போலீஸார் ரோந்து வாகனங்களில் வலம் வருகின்றனர். இதற்காக சென்னை மாநகர காவல்துறையில் 320 வாகனங்கள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களில் கண்காணிப்பு கேமராக் களை பொறுத்தி கண் காணிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. வாகனத்தின் மேல்பகுதி மற்றும் பின்பகுதி ஆகியவற்றில் தலா ஒரு கேமராக்கள் என வாகனத்துக்கு வெளியே 2 கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
தமிழகத்தில் 4 இடங்களில் உணவுச்சாலை: ரூ. 4 கோடியில் அமைக்க திட்டம்
சென்னை, மே 5- தமிழ்நாட்டில் 4 இடங்களில் ரூ. 4 கோடி செலவில் ‘புட் ஸ்ட்ரீட்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்து. நாடு முழுவதும் 100 ஆரோக்கியமான உணவு வீதிகளை உருவாக்கும் உணவு வீதி திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயல்படுத்த உள்ளது. உணவு வர்த்தகங்கள் மற்றும் பொதுமக்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை ஊக்கப்படுத்தி, அதன் வாயிலாக உணவால் ஏற்படும் நோய்க ளைக் குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கி யத்தை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதை செயல்படுத்துவதற்கு சோதனை முயற்சியாக ஒவ்வொரு உணவு வீதிக்கும் தலா ரூ. 1 கோடியை ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கம் வழங்கும். பாதுகாப்பான குடிநீர், கை கழுவுதல், கழிவறைகள், பொதுவான இடங்களில் தரை அமைத்தல், முறையான திரவ மற்றும் திடக் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துடன் இணைந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தொழில்நுட்ப உதவியுடன், தேசிய சுகாதார இயக்கத்தின் வாயிலாக இது அமல்படுத் தப்படும். இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4 உணவு வீதிகளும், புதுச்சேரியில் 1 உணவு வீதியும் அமைக்க பரிந்துரைக்கப்பட் டுள்ளது.
ஊட்டச்சத்து பொருட்கள் அறிமுகம்
சென்னை. மே 5- உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய 12 தனித்து வமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை அறிமுகப் படுத்தியுள்ளதாக சிவ்சா பிரைவேட். லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இணையதளமான www.civsa.in இல், இந்த பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோல் பராமரிப்பு, உடல்நலம், உடற்தகுதி, விளையாட்டு மற்றும் யோகா, ஊட்டச்சத்து, கல்லூரி தேர்வில் சாதனை மாணவர்களுக்கு புத்தகம் பரிசுதகவல் தொழில்நுட்பம், சுயமாகத் உருவான தொழில்முனைவோர் என 100க்கும் மேற்பட்டோர் அறிமுக விழாவில் கலந்துகொண்டனர். உடல் ஆரோக்கி யத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாக கொண்டு இந்த பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிவ்சா நிறுவனம் தெரிவித்துள்ளது. அன்றாட வாழ்க்கையில் நமக்கு தேவைப்படும் புரதம், நுண் ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கியமான தோல், அமைதி யான உறக்கம், எலும்பு ஆரோக்கியம், கல்லீரல் மற்றும் குடல் பராமரிப்பில் கவனம், விழிப்புணர்வு, ஆகியவற்றுக் காக இந்த கூடுதல் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது என அந்நிறுவனம் கூறியுள்ளது.
தேனீ கொட்டி முதியவர் பலி
கிருஷ்ணகிரி,மே 5- சூளகிரிவட்டம், தோரிப்பள்ளி அருகே கானலட்டியை சேர்ந்தவர் 63 வயது கூலித் தொழிலாளி முனியப்பன். கடந்த 1-ந் தேதி செக்கார்லு மலை பகுதியில் முனீஸ்வரன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது தேனீக்கள் கொட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த முனியப்பாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனின்றி முனியப்பன் இறந்தார்.
கல்லூரி தேர்வில் சாதனை மாணவர்களுக்கு புத்தகம் பரிசு
திருவண்ணாமலை, மே 5- செய்யாறு அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களைப்பெற்ற 441 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள நூல்களைத் தமிழ் துறை சார்பில் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வில் கல்லூரியில் பயிலும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற 441 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 2.5 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை மாணவர்களுக்கு பரிசாக கல்லூரி தமிழ் துறை சார்பில், தமிழ்த்துறை தலைவர் முனைவர் கண்ணன் வழங்கினார். கல்லூரி மாணவர்கள் கல்வியில் மிகவும் ஆர்வமுடன் வளர்ச்சி பெற வேண்டும் என்ற உன்னத நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் துறை சார்பில் மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.
சாலை விபத்தில் டாக்டர் உள்பட 2 பேர் பலி
ஆரணி, மே 5- ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்தவர்கள் தயாநிதி, டாக்டர் சூரிய சேகர் ரெட்டி, மோனிகா, மதுமிதா. இவர்கள் அனைவரும் சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு காரில் சென்றனர். கிரிவலம் முடிந்து ஊருக்கு புறப்பட்டனர். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பாக்கம் கிராமத்தில் இருந்து 20 பேர் திருவண்ணாமலைக்கு வேனில் சென்றனர். வண்ணாங்குளம் அருகே சென்று கொண்டிருக்கும் போது காரும் வேனும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த தயாநிதி, டாக்டர் சூரியசேகர்ரெட்டி சம்பவ இடத்திலேயே இறந்தனர். காரில் இருந்த 2 பெண்களும், வேனில் இருந்த சிறுவனும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்ணமங்கலம் காவல் துறையினர் 2 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
கடலூர், மே 5- கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து. இவரது மகன் இளவரசன் (25). இவர் பொயனப்பாடி கிராமம் செல்லும் சாலையில் சொந்தமாக வாட்டர் சர்வீஸ் நிலையம் வைத்துள்ளார். இந்நிலையில் இங்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் போது, மின்சாரம் தாக்கியதில் இளவரசன் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இளவரசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுபாக்கம் காவல் துறையினர் இளவரசன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம் அருகே மருந்து பூங்கா
விழுப்புரம், மே 5- தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செய லகத்தில் இருந்து காணொளி காட்சி வாயி லாக, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிப்காட் வளா கத்தில் மருந்து பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து சிறுபான் மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி ஆகியோர் மருந்து பூங்கா கட்டுமானப் பணி யினை வெள்ளியன்று (மே 5) தொடங்கி வைத்தனர். இதில் திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் அமுதா, மயிலம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், சென்னை சிப்காட் மேலாண்மை இயக்குநர் பி.சி.பெருமாள், பெலாக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பாக்கிய ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெற்ற கடனை செலுத்த நெருக்கடி: அவமானம் தாங்காமல் வாலிபர் தற்கொலை காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
கடலூர், மே 5- சுய உதவி குழுவில் பெற்ற கடனை செலுத்தக் கோரி நெருக்கடி அளித்ததால் அவமானம் தாங்காமல் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை கோரி எஸ்.பி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள சக்கரவர்த்தி காலனியில் தாய், மனைவி ஒரு வயது குழந்தையுடன் ராஜசேகர் வசித்து வந்தார். சக்கரவர்த்து கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் குடும்ப செலவுக்காக அதே பகுதியில் வசிக்கும் மதுரா தனியார் மகளிர் சுய உதவிக் குழு தலைவி சாந்தி என்பவரிடம் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து கடனாக 50 ஆயிரம் ரூபாய், மாதம் 2,472 ரூபாய் வீதம் இரண்டு வருடங்கள் கட்ட வேண்டும் என்ற நிபந்தனை யின் பேரில் ராஜசேகர் குடும்பத்தினருக்கு வாங்கி தந்துள்ளார். இரண்டு மாதம் முன்பு வரை ராஜசேகர் மாத தவணையை செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு மாத தவணையை உடனே செலுத்துமாறு மகளிர் குழுவினர் வியாழன் இரவு 7 மணிக்கு அவரின் வீட்டிற்கு சென்று ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் உயிரைக் கொடுத்தாவது பணத்தை கட்ட வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது ராஜசேகரின் தாயாரும், மனைவி யும் மறுநாள் 12 மணிக்குள் கட்டி விடுகிறோம் என கெஞ்சியுள்ளனர். அப்போது மகளிர் குழுவை சேர்ந்த வசூல் செய்பவர்கள் வீட்டிற்குள் நுழைந்து அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் தாங்காமல் ராஜசேகர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள் ளார். ஆனால் காட்டுமன்னார்கோயில் காவல் துறையினர் மேற்கண்ட உண்மைத் தன்மையை மறைத்து குடும்ப நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்ட தாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை ரத்து செய்து உண்மைத் தன்மையை அறிந்து வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.