கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி ஓசூர் பிஎம்சி டெக் பொறியியல் கல்லூரியில் கட்டுரைப்போட்டி நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் பி.குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, முதல்வர் பாலசுப்பிரமணியன், இயந்திரவியல் துணைத் தலைவர் முத்துக்குமார், பொறியாளர் அமைப்பாளர் வெற்றி ஞானசேகரன், வனவேந்தன் கலந்து கொண்டனர். முதல் மூன்று பரிசுகள் பெற்ற யுவராஜ், புவனேஸ்வரி, ஜெயந்தி ஆகியோருக்கு மாநகர மேயர் எஸ்.ஏ.சத்தியா சான்று பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.