districts

அரிசி மூட்டை வழங்கி எஸ்கேப் ஆன புதுச்சேரி பாஜக அமைச்சர்

புதுச்சேரி,ஆக.23-  

      கேள்வி எழுப்பும் பெண்களிடம் இருந்து தப்பிக்க   புதுச்சேரி பாஜக அமைச்சர் அரிசி மூட்டை வழங்கினார்.

    புதுச்சேரி அடுத்துள்ள பாகூர் கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட குருவி நத்தம்,சோரியாங்குப்பம் ஆகிய கிராம பஞ்சாய்த்துக்களுக்கு உட்பட்ட பகுதி களில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தூர்வாரும் பணி  துவக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது.

    பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் இரா.செந்தில்குமார், வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் முன்னிலை யில்,விழாவில் பாஜகவை சேர்ந்த புதுச்சேரி குடிமைபொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர்  சாய் ஜெ .சரவணன்குமார் பங்கேற்றார்.  அப்போது அவரை சூழ்ந்த பெண்கள் அண்டை மாநிலங்களில் ரேசன்கடைகள் மூலம்  அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஏன் புதுச்சேரியில் ரேசன் கடைகளை திறக்க வில்லை. ரேசன்கடைகளை திறந்து அரிசியை வழங்குங்கள் என்று பெண்கள் அமைச்சரிடம் சராமாரியாக கேள்வி எழுப்பினர்.அதற்கு அமைச்சர் விரைவில் ரேசன்கடைகளை திறப்போம் என்று கூறியவாறு அடுத்த பகுதி சென்றார்.

அரிசி மூட்டை

      புதுக்குப்பத்தில் நடைபெற்ற 100நாள் திட்ட துவக்கவிழாவில் பங்கேற்ற அமைச்சர் சாய்ஜெ சரவணன்குமார்  பெண்களின் கேள்வியை சமாளிப்பதற்காக,குஜராத் மாநிலத்தில்  மிகப்பெரிய அளவில தலை வரின் சிலை உள்ளது. அந்த தலைவரின் பெயரை கூறும் பெண்களுக்கு 25கிலோ  அரிசி மூட்டை வழங்கப்படும் என்று கேள்வி கேட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண் சரியான பதிலை கூறிய உடன் அவருக்கு அரிசி மூட்டையை கொடுத்தார். அதேபோல் இருளஞ்சந்தை பகுதியில் நடைபெற்ற விழா வில் அதே பாணியை கடைபிடித்த அமைச்சர் சரவணன்குமார் மோடி குறித்து கேள்வி கேட்டு பதிலளித்த பெண்களுக்கு அரிசி மூட்டையை கொடுத்து பெண்களின் கேள்வியில் இருந்து தப்பித்தார். அமைச்ச ரின் இச்செயல் புதுச்சேரியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.