districts

img

இராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது

இராமநாதபுரம், நவ.27- தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.காசிநாத துரை தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.குருவேல், மாவட்டக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, மாவட் டச் செயற்குழு உறுப்பினர்கள் என். கலையரசன், எம்.ராஜ்குமார், இ.கண்ணகி, கே.கருணாகரன், சிஐ டியு மாவட்டத் தலைவர் எஸ். ஏ.சந்தானம், மாற்றுத்திறனாளிகள் சங்க அகில இந்திய நிர்வாகி நம்பு ராஜன், சிபிஎம் தாலுகா செயலாளர்கள் பி.செல்வராஜ், ஜி.சிவா, டி.ராஜா, வி.முருகன், பி.முத்துசாமி, அம்ஜத் கான், மகாலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.வெங்கடேஷ், முத்து விஜயன், ஆரோக்கிய நிர்மலா  உள்ளிட்ட சுமார் 300-க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் பேசுகையில், ‘‘இரா மநாதபுரம் மாவட்டத்தின் விவசா யத்தை பாதிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கின்ற பணிகளை மாவட்டம் முழுவதும் துவக்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.  ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகளை நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களான அம்பானி, அதானி உள்ளிட்ட நிறு வனங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு கொடுத்து விடும். இதனால் மாவட்ட த்தின் விவசாய விளைநிலங்கள் குடிநீர் பாதிப்புகள் கண்டிப்பாக ஏற்படும்.  இந்த பாதிப்புகளை தடுக்கும் விதத்தில் சுற்றுச்சூழல் அனுமதி கொடு க்கக் கூடாது. இதன் தொடர்ச்சியாக பெருமளவில் விவசாயிகளை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இயக்கம் நடத்தப்படும்’’ எனக் கூறினார்.