ராணிப்பேட்டை,பிப்.12 – தனியார் தோல் தொழிற்சாலையில் குப்பை களை சுத்தம் செய்த போது தோல் ரசாயன கழிவு கள் தீப்பற்றி எரிந்து புகை மண்டலம் சூழ்ந்த நிலை யில் பொதுமக்கள் தொழிற்சாலை முற்றுகை யிட்டனர். ராணிப்பேட்டை நக ராட்சிக்கு உட்பட்ட பகுதி யில் உள்ளது அன்னை பாத்திமா தோல் தொழிற்சாலை. இங்கு கால்நடைகளின் பச்சை உப்பு தோல் நேரடியாக கொண்டு வந்து பதப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. ரசாயனங்களை கொண்டு பதப்படுத்தப்பட்ட தோல் கழிவு நீர், தலித் மக்கள் வசிக்கும் பகுதி கால்வாய்களில் வெளி யேற்றி, நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில் வெளி யேற்றுவதாக கூறப்படு கிறது. இந்த நிலையில் திங்க ளன்று (பிப்.10) தொழிற்சாலைக்குள் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வதாக கூறி தீயிட்டு எரித்து சுத்தம் செய்த நிலையில் அதன் அருகே கொட்டப்பட்டிருந்த ரசாயன தோள் கழிவுகளில் தீ பற்றி எரிந்துள்ளது. இத னால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் குழந்தைகள், முதியோர் மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதி இளைஞர்கள், பொது மக்கள் தொழிற்சாலை நிர்வாகத்தினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தொழிற் சாலை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து ராணிப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து புகை பரவலை தடுத்தார்கள். அதனைத் தொடர்ந்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.