districts

சென்னை முக்கிய செய்திகள்

தீவிபத்து:  ஒரே குடும்பத்தில்  4 பேர் பலி

சென்னை,ஆக.19- சென்னை மணலி அருகே  உள்ள மாத்தூரில், வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  உயிரிழந்தனர். கொசு விரட்டும் லிக்விட்  இயந்திரம் சூடாகி உருகிய துடன் அட்டைப்பெட்டியின் மீது விழுந்து தீப்பிடித்துள் ளது. தீ பிடித்ததால் வீடு  முழுவதும் புகை மூட்டம்  ஏற்பட்டுள்ளது. புகை மூட்டத் தால் மூச்சு திணறி சந்தான லட்சுமி, அவரது 3 பேத்திகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்ப வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

குடும்ப தலைவிகள் உரிமைத் தொகை  விண்ணப்ப முகாம் இன்று நிறைவு

சென்னை,ஆக.19- மகளிர் உரிமைத் தொகை பெறுவ தற்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கிய  சிறப்பு முகாம்கள் 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. விடுப்பட்டவர்களுக்கு வெள்ளியன்று சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதுவரையில் மனு கொடுக்காதவர்க ளுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது. கடந்த 2 கட்ட முகாம்களி லும் விண்ணப்பிக்காத ஒரு சிலர் மட்டுமே தற்போது முகாம்களில் மனு கொடுத்து வருகின்றனர்.  சென்னையில் இதுவரையில் 12 லட்சம் பெண்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் 9  லட்சத்து 25 ஆயிரம் பேர் விண்ணப்பங் களை பதிவு செய்துள்ளனர்.  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி  ஒருவர் கூறியதாவது:- இனிமேல் சிறப்பு முகாம்கள் நடத்த வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் விண்ணப் பங்கள் தொடர்ந்து வாங்கப்படும். எந்த  அலுவலகத்தில் மனு கொடுப்பது என்ற விவரத்தை அரசு அறிவிக்கும். தகுதி உள்ள பெண்களிடம் தொடர்ந்து விண்ணப்ப படிவம் வாங்கப்படும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமர்பிக்கப்பட்டுள்ள விண் ணப்ப படிவங்கள் 23-ந்தேதி முதல் ஆய்வு செய்யப்படும். இந்த பணி 30-ந்தேதி வரை நடைபெறும்.  மகளிர் உரிமைத் தொகை கேட்டு  விண்ணப்பித்த மனுக்களில் முறை யான ஆவணங்கள், தகவல் இல்லாத குடும்பத் தலைவியின் வீடுகளில் மட்டுமே ஆய்வு செய்யப்படும். படிவங் களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் முழுமையாக எவ்வித சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருந்தால் அத்தகைய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அவர்களின் வீடுகளுக்கு கள ஆய்வு நடத்த தேவை இல்லை. சென்னையில் உள்ள 1,428 ரேசன் கடைகளின் அடிப்படையில் 1,428 அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்கு உட்பட்ட விண்ணப்பங்களை அதற் குரிய அதிகாரி நேரில் சென்று விசாரிப்பார். வங்கி கணக்கு தகவல், மின்சார கட்டண ரசீது, ஏற்கெனவே உதவி தொகை வாங்குபவரா? என்பது  போன்ற தகவல் உறுதி செய்யப்படும். சந்தேகம் இருக்கும் மனுக்களின் வீடு களில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

வகுப்பறை பூட்டுகளுக்கு மனித மலம் பூசிய நாகரீகமற்ற செயலுக்கு வலுக்கும் எதிர்ப்பு 

திருவள்ளூர், ஆக.19- திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற் பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.  மாணவர்களுக்கு ஏற்ப பள்ளி கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குறுகலான இடத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வகுப் பறைகளுக்கு இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்த நிலை யில் மர்ம நபர்கள் மலம் பூசி யும் குடிநீர் தொட்டி உடைத்த சம்பவம் மாணவர்கள்  மற்றும் கிராம மக்களி டையை பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோபமடைந்த மாணவர்கள் வகுப்புகள் புறக்கணித்து பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையுள்ளது. மேலும் அடிக்கடி மர்ம நபர்கள் பள்ளியில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர் பாக பலமுறை புகார் செய் தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர். தமிழ்நாடு அரசு உடனடி யாக பள்ளிக்கு உட் கட்ட மைப்பு வசதிகள் மேம் படுத்தி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளி வகுப்பறைகளுக்கு மலம் தடவிய நபர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்தனர். மேலும் நாகரீக மற்ற இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

திருவேற்காடு, ஆக.19- திருவேற்காடு நகராட் சிக்கு உட்பட்ட சுந்தர சோழ புரம் பகுதியில் தாழங்குளம் என்ற இடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்த நகராட்சி  நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து தாழங் குளம் பகுதியில் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டிருப் பதாக  வருவாய் துறை தெரி வித்தது. இதனை அடுத்து  ஆக்கிரமிப்பு செய்துள்ள வர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெள்ளியன்று 11 ஆக்கிரமிப்பு குடியிருப்பு கள் மற்றும் கட்டிடங்களை இடித்து அகற்றினர்.பின்னர்  அங்கிருந்த 50 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப் பட்டது. இதன் மதிப்பு ரூ.5  கோடி என்று கூறப்படுகிறது.

மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை,ஆக.19- புது வண்ணாரப்பேட்டை இருசப்பன் தெருவை சேர்ந்தவர் மேனகா (வயது 40) மாநகராட்சியில் வேலை பார்த்து வருகிறார்.  வாடகை வீட்டில் ஒரு மகள், மகன், தாத்தா, பாட்டி  ஆகியோர் வசித்து வரு கிறார்கள். இவரது மகள்  கீர்த்தனா (17) தண்டையார் பேட்டையில் உள்ள தனியார்  பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். வெள்ளி யன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய கீர்த் தனா அறைக்குச் சென்று வெகு நேரம் வெளியே வரா ததால் அவரது தம்பி சென்று  பார்த்த போது கீர்த்தனா மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந் தது. ‘நான் இந்த முடிவு எடுக்கறதுக்கு காரணம் என்னோட எக்கனாமிக் ஆசிரியர் தான்’ என்று எழுதி வைத்துள்ளார். 

நடுவீரப்பட்டில் பள்ளி மதில் சுவர்  இடித்து ஆக்கிரமிப்பு

கடலூர்,ஆக. 19-  நடுவீரப்பட்டில் பள்ளியின் மதில் சுவர் இடித்து பள்ளி இடத்தை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.  இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அவர்கள்  அனுப்பி உள்ள மனுவில் கூறி யிருப்பதாவது.  நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் எஸ்.தட்சணா மூர்த்தி மற்றும் உறுப்பினர்  அனைவரும் பள்ளியில் இடிக்கப்பட்ட மதில் சுவரை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதில் மதில் சுவர் ராணிப்பேட்டை கிராமத்தில் வசிக்கும் சில நபர்களால் இடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.  மதில் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் அவ்விடத்தில் இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை இரண்டு அலகுகள் பயன்பாட்டில் உள்ளது எனவே ஆக்கிரமிப்பு செய்த நபர்களின்  மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். என அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

இலவச  மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை, ஆக. 19-  திருவண்ணாமலை மாவட்டத்தில் விரைவாக இலவச மின் இணைப்புப் பெற விரும்பும் விவசாயிகள், உரிய பணம் செலுத்திப் பயன்பெறலாம்  என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் எஸ்.பழனிராஜூ வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவ சாயிகள் விரைவாக விவசாய மின் இணைப்புப் பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்படி, 5 குதிரைத்திறன் வரையுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், 7.5 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டார்களுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரமும், 10 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டார்களுக்கு ரூ.3 லட்சமும், 15 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டார்களுக்கு ரூ.4 லட்சமும் ஒரு முறைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.  தொகையைச் செலுத்தும் விண்ணப்பதாரர்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். மின் வாரி யத்தில் ஏற்கெனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விவசாயிகளும், புதிதாக விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்து சிறப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகளும் தங்கள் பகுதி யில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலு வலகத்தை நேரில் அணுகி தங்களது இசைவைத் தெரி வித்து, பணம் செலுத்திப் பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் முறைகேடு:  விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்

கடலூர்,ஆக.19- கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகள் பெயரில் போலியாக  ஆவணங்களை தயார் செய்து 5 கோடிக்கு மேலாக முறை கேடு நடந்துள்ளதை சிபிஎம் கடலூர் மாவட்டக்குழு கண்டித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தக்  கோரி மாவட்டஆட்சியருக்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்கட்சி கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் அளித்துள்ள மனு விவரம் வருமாறு, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பிரதம மந்திரி விவசாயிகள் பாதுகாப்பு திட்டத்தில் ( பி.எம்.கிஷான் திட்டம்) 10 கோடிக்கு மேலாக போலியாக விவசாயி அல்லாதவர்கள் பெயர்களை இணைத்து பணத்தை வாங்கிக் கொண்டு முறைகேடு செய்ததை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக புகார் அனுப்பப்பட்டு போலியான நபர்களிலிருந்து பணம் திரும்ப பெறப்பட்டது இது குறித்து பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும்  உழவர் பாதுகாப்புக்கு திட்டத்தில்  திட்டக்குடி பகுதியில் 5 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. திட்டக்குடி பகுதியில் மட்டும் நடந்துள்ளதா மாவட்டம் முழுவதும் இந்நிலை உள்ளதா என்பது குறித்து முறையான விசாரணை நடத்திட வேண்டும் இதற்கு தொடர்புடைய அனைத்து அலுவலகம் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் கோட்டாட்சியர் விசாரணை மற்றும் இன்றி சிபிசிடி காவல்துறை விசா ரணைக்கு உத்தரவிட தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.