districts

img

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு உற்சாக வரவேற்பு

திருவள்ளூர், மார்ச் 30- திருவள்ளூர் (தனி),  மக்களவைத் தொகுதி கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்  சனிக்கிழ மையன்று (மார்ச் 30), வாக்குகளை சேகரித்தார். அவருக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் பிரச்சாரம் சனிக்கிழமையன்று (மார்ச் 30), துவங்கினார். பின்னர் தோக்கமூர், கண்ணம்பாக்கம், பல்லவாடா, மாநல்லூர், பாதிரிவேடு, மாதர் பாக்கம், தேர்வாய்கண்டிகை, பூவலம்பேடு, சித்தராஜ கண்டிகை, கவரைப்பேட்டை,  சிறுபுழல்பேட்டை, கும்மிடிப்பூண்டி, எளாவூர் ஆகிய இடங்களில் கை சின்னத்திற்கு வாக்கு களை சேகரித்தனர். வழி நெடுகி லும் பெண்கள், விவசாயத் தொழி லாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக வரவேற்றனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திமுக தொழில்நுட்ப அணியின் மாநில துணை நிர்வாகி சி.எச்.சேகர், காங்கிரஸ்  மாவட்டச் செய லாளர் சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஏ.ஜி.கண்ணன், கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி.சூரியபிரகாஷ், ஏ.பத்மா, சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.