districts

img

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்

புதுச்சேரி, மார்ச்18- பாலின சமத்துவம் குறித்து சிறப்பு கருத்தரங்கம் புதுச்சேரியில் நடைபெற்றது. சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் சார்பில் 113வது உலக மகளிர் தினவிழா புதுச்சேரி முல்லை நகரில் உள்ள அரசு ஊழி யர் சம்மேளனத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சமம் இயக்கத்தின் தலை வர் அன்பரசி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்ற கருத்தரங்கத்தில் எழுத்தாளர் ஜே.தீபலட்சுமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் பேரா சிரியர் எஸ்.மோகனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர். டாக்டர் ஆர்.மதிவாணன், அரசு ஊழி யர் சம்மேளன பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் டி.ஜி.முனியம்மாள், சமம் இயக்கத்தின் பொதுச்செயலாளர் இளவரசி,பொருளாளர் இந்திரா, நிர்வாகி சி.பச்சையம்மாள் உட்பட திரளான பெண்கள் கருத்தரங்கத்தில் பங்கேற்றனர். தீர்மானம் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை ஒன்றிய-மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்,  குழந்தைகள்,பெண்கள் மீதான  பாலியல் ரீதியிலான தாக்குதலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்,  சட்டமன்றம், நாடாளு மன்றத்தேர்தலில் பெண்களுக்கான உரிய  இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கருத் தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.