districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் அமலாக்கத்துறையினர்  10 இடங்களில் சோதனை

சென்னை, மார்ச் 9- சென்னையில் அமலாக் கத்துறை அதிகாரிகள் சனிக் கிழமையன்று 10 இடங்களில்  சோதனையில் ஈடுபட்டனர். அரசு ஒப்பந்ததாரர், பார்  உரிமையாளர், கட்டுமான நிறுவன உரிமையாளர் அதிபர் வீடு என சென்னை மாநகரின் பல்வேறு இடங்க ளில் இந்த சோதனை நடை பெற்று வருகிறது. சென்னை வேப்பேரி யில் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரமாண்ட  அடுக்குமாடி குடியிருப்பில் தொழில் அதிபர் மகாவீர் இரானி வசித்து வருகிறார். கட்டுமான தொழில் மற்றும் நிதி நிறுவன தொழிலில் ஈடுபட்டு வரும் அவரது வீட்டில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராஜா  அண்ணாமலைபுரம் முதல் தெருவில் அரசு ஒப்பந்த அதிகாரி செல்வராஜ் வசித்து வருகிறார். இவர்  பொது விநியோக திட்டத் தின் கீழ் ரேசன் கடைக ளுக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களை ஒப்பந்த அடிப்படை யில் சப்ளை செய்து வருகிறார். ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. பணப்பரிமாற்ற புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண் காவலர்களுக்கு ஒரு மாத  இலவச மேமோகிராம் பரிசோதனை

சென்னை, மார்ச் 9- மார்ச் 8-ந்தேதி ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினம்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  அதையொட்டி சென்னையில் உள்ள பிரசாந்த் மருத்துவமனை பெண் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக பிரத்யேகமாக ஒரு மாத  கால இலவச மேமோகிராம் மற்றும் மார்பக ஆலோசனை முகாமை நடத்துகிறது. இந்த முகாமின் முக்கிய நோக்கம்,  மார்பக புற்றுநோய் மற்றும் அது தொடர்பான பிரச்சினை களை முன்கூட்டியே கண்டறிவதை ஊக்குவிப்பதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும். கொளத்தூரில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் இந்த முகாமை பிரசாந்த் மருத்துவமனைகள் மற்றும் பிரசாந்த் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையத் தலைவர் கீதா ஹரிபிரியா, பிரசாந்த் மருத்துவமனைகள் இயக்குநர் டாக்டர் சம்ஹிதா மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா ஆகியோர்  தொடங்கி வைத்தனர். மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று அம் மருத்துவ மனை நிர்வாகம் கூறுகிறது.

கேஎஸ்பி நிறுவனத்தின் விற்பனை வருவாய் அதிகரிப்பு

சென்னை, மார்ச் 9- கேஎஸ்பி நிறுவனத்தின் விற்பனை வருவாயானது 2023-ம் ஆண்டில் ரூ.2247 கோடியாக உயர்ந்துள்ளது.  அக்டோபர் முதல் டிசம்பர் 2023 வரை முடிந்த 4வது காலாண்டு நிதிநிலை அறிக்கையை இந்நிறுவனம் வெளி யிட்டுள்ளது. அதில்  4வது காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனையானது கடந்த நிதி ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் ரூ.524.6 கோடியில் இருந்து 602.6  கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் டிசம்பர்  வரையிலான காலத்தில் இது ரூ.2247.2 கோடியாக உள்ளது. இது 2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை  1822 கோடி ரூபாயாக இருந்தது. இதேபோல் நிகர வருவாய னது ஜனவரி 2022-ம் ஆண்டில் 179.3 கோடி ரூபாயாக இருந்தது  2023-ம் ஆண்டில் 204.6 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட கடலூர் - சித்தூர்  சாலை திறப்பு

திருவண்ணாமலை, மார்ச் 9- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  திருவண்ணாமலையில் 4 வழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட ரூ.140 கோடி மதிப்பீட்டில் கடலூர் - சித்தூர் 4 வழிச்சாலை மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வெள்ளி யன்று  திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி யில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டனர். திருவண்ணாமலை-திருக் கோவிலூர் சாலையில் மேலத்திக் கான ஊராட்சி பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் 4 வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட கடலூர் - சித்தூர் 4 வழிச் சாலையை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, கடலூர் - சித்தூர் 4 வழிச்சாலையை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மக்களவைத் உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை,  சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் ஆகி யோர் பங்கேற்றனர். 

வேலூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்

வேலூர், மார்ச் 9 - வேலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் சுனில்குமார், ஆணையர் ஜானகி ரவீந்திரன், துணை ஆணையர் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் வரிவிதிப்பு குழுத் தலைவர் ரவிக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதை மேயர் சுஜாதா பெற்றுக்கொண்டார். அதில், 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதி வாரியாக பட்ஜெட் வரவினங்கள் மற்றும் செலவினங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருவாய் வரவினங்கள் குடிநீர், கல்வி உள்ளிட்டவை மூலம் ரூ.217.82 கோடியும் மற்றும் மூலதனம் மற்றும் செலவினங்கள் என மொத்தம் ரூ.792.17 கோடிக்கு என தெரிவிக்கப்பட்டது. இவற்றில் மாநகராட்சி பள்ளிகளில் ரூ.7 கோடி செலவில் பராமரிக்கவும், 15 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு  மையம் அமைக்கவும், தெருநாய்களை பிடிப்பதற்காக ஏபிசிமையம் அமைக்கப் பட்டு 1,2 மற்றும் 3வது மண்டலங்களில் ரூ.30 லட்சம் செலவில் நாய்கள் கருத் தடை மையம் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.