சென்னை, ஆக. 3-
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் குறளகம் பகுதி மாநாடு வலியுறுத்தியுள்ளது.
தலைவர் த.வேல்முருகன் தலைமையில் செவ்வாயன்று (ஆக. 1) நடைபெற்ற மாநாட்டை. மாவட்ட துணைத் தலைவர் ஆ.கோபிநாதன் துவக்கி வைத்தார். பகுதிச்செயலாளர் ச.முருகன் வேலை அறிக்கையையும், பொருளாளர் ச.நரேஷ் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.
மாவட்டத் தலைவர் வெ.விஜயகுமரன், செயலாளர் ம.அந்தோணிசாமி, துணைத் தலைவர் த.குணசேகரன், இணைச்செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட பொருளாளர் த.ஏழுமலை மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக இணைச்செயலாளர் ப.ராஜசேகர் வரவேற்றார். கே.சுப்புரத்தினம் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மெமோரியல் ஹால் இடைப்பட்ட சாலையில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரமான கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும், நிலுவை அகவிலைப் படியை உடனே வழங்க வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் அரசாணை 115, 132, 155 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
தலைவராக த.வேல்மோகன், செயலாளராக ச.முருகன், பொருளாளராக ச.நரேஷ் உள்ளிட்ட 8 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.