திருவண்ணாமலை, டிச.9- திருவண்ணாமலை மாவட்டத்தில் 51 பள்ளிகளில் ஆற்றல் மன்றம் சார்பில் மத்திய திறனூக்கச் செயலகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளி கல்வித்துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்று மற்றும் கேடயம் வழங்கினார். இந்த விழாவுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருவண்ணாமலை மேற்பார்வை பொறியாளர் எஸ்.பழனி ராஜீ தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளர் ஏ.முருகன் வரவேற்றார். இந்த விழாவில் செயற்பொறியாளர்கள் வா.ஜெகநாதன், கு.சங்கரன், எஸ்.குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் இ.மோகன், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.