districts

img

அங்கன்வாடி ஊழியரை மிரட்டிய அதிகாரிக்கு ஊழியர்கள் எதிர்ப்பு

சென்னை, பிப். 26- அங்கன்வாடி ஊழியரை மிரட்டிய அதிகாரியை கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவி யாளர்கள் சங்கத்தின் சார்பில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமையன்று (பிப் 26) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரசு அதிகாரியின் இந்த அராஜக அணுகுமுறையை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில்  சங்க நிர்வாகிகள் ஹேமப்பிரியா, மணிமாலை, முனீஸ்வரி, யுவராணி, தேவி பிரசன்னா, நிர்மலா, சசிகலா, ரத்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாநிலச் செயலாளர் சித்திரை செல்வி கூறுகையில், சென்னை ராயபுரம் சஞ்சீவராயன் தெருவில் உள்ள அங்கன் வாடி (திட்டம்-1) மையம் 219, 220இல் சுதா என்பவர் பணிபுரிகிறார். இந்நிலை யில் மையத்தை பார்வையிடு கிறேன் என்ற பெயரில் அங்கு  வந்த ஓய்வுபெற்ற அதிகாரி  ராகிணி என்பவர் ஊழியர்  சுதாவிடம், அவரை பதில ளிக்க விடாமல் அடுக்கடுக் கான கேள்விகளை எழுப்பி யுள்ளார். மேலும் சுதாவிற்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள் ளார். இதனால் சுதா மனதள வில் பாதிக்கப்பட்டு கீழே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை  மீட்டு தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ஒரு ஊழியரை மன உளைச்சலுக்கு ஆளாக் கிய, அதிகாரி மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்வை யிட வரும் அதிகாரிகள் ஊழியர்களை மிரட்டுவதை கைவிட்டு விட்டு, மனிதா பிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.